திண்டுக்கல், பிப், 11
தமிழ் தேசிய பார்வர்டு பிளாக் கட்சி நிறுவனத் தலைவர் வழக்கறிஞர் சங்கிலி அவர்கள், மாநில பொருளாளர் ஆனந்த் ஆகியோரின் வழிகாட்டுதலின் பெயரில் தற்போது பல்வேறு மாவட்டங்களில் மாற்றுக் கட்சி சார்ந்த இளைஞர்கள் பொதுமக்கள் பலரும் தமிழ் தேசிய பார்வர்டு பிளாக் கட்சியில் இணைந்து வருகின்றனர்
அதன்படி
திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டியில் மாற்றுக் கட்சிகளை சேர்ந்த இளைஞர்கள் ஏராளமானோர் மாநிலத் துணைத் தலைவர் ஆர்.ஆர். ரவிக்குமார்ஜி, மாநில ஒருங்கிணைப்பாளர் ஐயப்பன் ஆகியோர் முன்னிலையில்
தமிழ் தேசிய பார்வர்டு பிளாக் கட்சியில் இணைந்தனர். நிகழ்ச்சி ஏற்பாட்டை திண்டுக்கல் மாவட்ட செயலாளரும் மாநிலச் செயலாளருமான கோடை ஆனந்த் சிறப்பாக செய்திருந்தார்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நகரம், ஒன்றியம் சார்பாக தமிழ் தேசிய பார்வர்டு பிளாக் கட்சியின் மாநில செயலாளரும், திண்டுக்கல் மாவட்ட செயலாளர். கோடை வி. ஆனந்த் ஏற்பாட்டில், திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டியில், தமிழ் தேசிய பார்வர்டு பிளாக் கட்சியில் மாநில துணைத்தலைவரும்,திண்டுக்கல் மாவட்ட பொதுச் செயலாளர் ஆர்.ஆர். ரவிக்குமார் ஜி, தலைமையில் மாற்றுக் கட்சியில் இருந்து, சுமார் 50-க்கும் மேற்பட்டோர் தமிழ் தேசிய பார்வர்டு பிளாக் கட்சியின் தன்னை இணைத்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் தமிழ் தேசிய பார்வர்டு பிளாக் கட்சியில் மாநில ஒருங்கிணைப்பாளர், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த தலைவர்,ஐயப்பன், கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். இந்நிகழ்ச்சியில் மாநில மாணவர் அணி செயலாளர் ஸ்டாலின், மாவட்ட இளைஞரணி பொதுச் செயலாளர்.
சடையாண்டி மாவட்ட பொருளாளர் நவீன், திண்டுக்கல் மாவட்ட இளைஞரணி செயலாளர் அன்னக்கொடி, மற்றும், மாவட்ட துணை பொருளாளர் பிரவீன், கலந்து கொண்டனர் மேலும் இந்நிகழ்ச்சியில் கொடைக்கானலை சேர்ந்த , நவீன் திண்டுக்கல் மேற்கு மாவட்ட அமைப்பு செயலாளராகவும்,
கார்த்தி அவர்களுக்கு திண்டுக்கல் மேற்குமாவட்ட துணைச் செயலாளராகவும், பொறுப்புகள் வழங்கப்பட்டது.
மேலும் நிகழ்ச்சியில் மாவட்ட, நகர,ஒன்றிய நிர்வாகிகள்,கலந்து கொண்டு சிறப்பித்தனர். தமிழ் தேசிய பார்வர்ட் பிளாக் கட்சியில் மாற்றுக் கட்சியை சேர்ந்த இளைஞர்கள் தொடர்ந்து இணைந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

