தூத்துக்குடி ஸ்ரீ பிரத்தியங்கிரா தேவி ஆலயத்தில் சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் உலகில் அன்பு, அமைதி நிலவவேண்டியும், தொழில்கள் சிறந்திடவும், மகாயாகம் வழிபாடு நடைபெற்றது.
தூத்துக்குடி,பிப்,9
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் தை மாதம் வாராஹி அம்மனுக்கு தேய்பிறை பஞ்சமி பூஜை அபிஷேகம் மகாயாகம் அன்னதானம் நடைபெற்றது பிரத்தியங்கிரா தேவி ஆலயத்தில் சாக்தஸ்ரீ” சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் உலகில் அன்பு, அமைதி நிலவவேண்டியும், விவசாயம் உள்ளிட்ட அனைத்து தொழில்களும் சிறந்திடவும், பக்தர்கள் வாழ்வில் செல்வ வளம் பெருகி கொழித் திட வேண்டி வாராஹி அம்மனுக்கு மஹா யாக சிறப்பு வழிபாடுகள் காலை முதல் மாலை வரை நடைபெற்றது. வாராஹி அம்மனுக்கு .பால், பன்னீர், தேன், தயிர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட 64வகையான அபிஷேகமும், தொடர்ந்து, ரோஜா, தாமரை, மல்லிகை, முல்லை மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை நடந்தது. மதியம் பக்தர்களுக்கு மஹா அன்னதானம் வழங்கப்பட்டது.இந்த மகா யாகத்தில், பக்தர்கள் திரளாக பங்கேற்று வழிபட்டனர்.

