தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தை சேர்ந்தவர் ஜான்சிராணி, இவர் பிஎஸ்சி படித்துள்ளார். 2010ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை 8 ஆண்டுகள் மொரிசியஸ் நாட்டில் உள்ள மருத்துவமனையில் பணி செய்து வந்திருக்கிறார். இவருக்கும் கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே உள்ள இலவுவிளையைச் சேர்ந்த திருவரம்பூர் கல்வாரி பேப்டிஸ்ட் திருச்சபையின் தலைமை போதகரும் டாக்டருமான ஆண்ட்ரூ பிரவீன் சதீஸ் என்பவருக்கும் சமூக வலைதளமான பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டு அவை காதலாக மாறியிருக்கிறது. இவர்களது காதலுக்கு ஜான்சிராணியின் பெற்றோர் சம்மதம் தெரிவித்து இருக்கிறார்கள்.
கடந்த 2018 ஜூலை மாதம் ஜான்சிராணி மொரிசியஸ் நாட்டில் இருந்து தமிழகம் வந்து,ஆண்ட்ரூ பிரவீன் சதீஸ்-யை செய்ய தேடிச்சென்று அவரிடத்தில் ஐக்கியமானார் தேவாலயத்தில் இருவரும் மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொண்டனர் 2019 அக்டோபர் மாதம் 18 ஆம் தேதி சென்னை பெரியமேட்டில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் திருமணத்தைப் பதிவு செய்துகொண்டார்கள். இவர்களுக்கு தற்போது 2 வயதில் ஒரு மகன் இருக்கிறார் இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்னர் ஜான்சிராணி குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்திருக்கிறார். அந்த புகாரில் எனது கணவர் 1 ரூபாய் 80 லட்சம் பணம் 40 பவுன் நகைகள் மருத்துவமனையை விரிவுபடுத்த வேண்டும் என்று கூறி வாங்கி இருக்கிறார் என் தந்தையிடம் இருந்து வரதட்சணையாக ரூபாய் 20 லட்சம் பெற்றுக்கொண்டார். ஏற்கனவே அவருக்கு திருமணமாகி 10 வயதில் ஒரு மகன் உள்ளான், என்பதை மறைத்து என்னை திருமணம் செய்துகொண்டார். இதை தட்டி கேட்ட போது என்னை அடித்து உதைத்து கொடுமை படுத்தினார். என் இரண்டாவது கருவை கலைத்து விட்டார். அவருக்கு பல பெண்களுடன் தொடர்பு கொண்டு உல்லாசமாக வாழ்ந்து வருகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் புகார் அளித்திருக்கிறார், ஜான்சிராணிஅளித்த புகார் மீது போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, இதனால் அவர் இரணியல் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஜான்சிராணி மனு தாக்கல் செய்திருக்கிறார், அந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜான்சி ராணியின் புகார் மீது வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருக்கிறார் அதன் பின்னரே குளச்சல் அனைத்து மகளிர் போலீசார் மத போதகரும், டாக்டருமான ஆண்ட்ரூ பிரவீன் சதீஷ் மீதும் அவரது தந்தை பொன்னையன், தாயார் நேவிஸ் உறவினர்கள் அமலோற்பவ மேரி, சகாய தாஸ், ஜெரால்ட், ஜெகன் ஆகிய 7 பேர் மீது வரதட்சணை கொடுமை, கொலை முயற்சி, மோசடி செய்தல் உள்ளிட்ட 15 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்திருக்கிறார்.
இந்த தகவல் அறிந்ததும் போதகர் ஆண்ட்ரூ பிரவீன் சதீஷ் குடும்பத்துடன் தலைமறைவாகிவிட்டார் போலீசார் அவர்களை தேடி வருகிறார்கள் இதற்கிடையே பெண் ஒருவருடன் தனிமையில் இருக்கும் ஆபாச புகைப்படம் மற்றும் வீடியோக்களை தனக்கு அனுப்பி பணம் கேட்டு மிரட்டி வருவதாகவும் மதபோதகர் வீடியோ ஒன்றினை வெளியிட்டு கதறி வருகிறார்.

