சென்னை பெருநகர போலீஸ் கமிஷ்னர் உத்தரவின்பேரில், காவல் ஆணையாளர் அலுவலகத்தில் பணியிட தூய்மை பராமரிப்பில் சிறப்பாகவும், கோப்புகளை சரியாக கையாண்டும் சிறந்த முறையில் பணிபுரியும் அமைச்சுப் பணியாளர்களை, மாதந்தோறும் தேர்வு செய்து காவல் ஆணையாளர் தலைமையில் பண வெகுமதி மற்றும் சுழற்கேடயங்கள் வழங்கி ஊக்குவிக்கப்படுகின்றனர்.
அதன்பேரில், சென்னை பெருநகர போலீஸ் கமிஷ்னர் மகேஷ்குமார் அகர்வால் 22.02.2021 காவல் ஆணையாளர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, கடந்த பிப்ரவரி மாதம்-2021 ல் பணியிட அலுவலகத்தை தூய்மையாக பராமரித்து சிறப்பாக கோப்புகளை கையாண்டு பணிபுரிந்த அலுவலக கண்காணிப்பாளர் பாஸ்கரன், உதவியாளர் வேல்பாண்டி ஆகியோருக்கு முதல் பரிசாக ரூபாய்.2000/ மற்றும் வெற்றியாளருக்கான சுழற்கோப்பையை வழங்கினார். 2 வது பரிசிற்காக HBT-II பிரிவு அலுவலகத்தை தேர்வு செய்து கண்காணிப்பாளர் மணிமேகலை, இளநிலை உதவியாளர் அருண்மொழி, தட்டச்சர் திரு.சங்கர்கணேஷ் ஆகியோருக்கு ரொக்கப்பரிசாக ரூபாய் 1,000/- மற்றும் சுழற்கோப்பை வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் காவல் கூடுதல் கமிஷ்னர் (தலைமையிடம்) அமல்ராஜ், இ.கா.ப., இணை கமிஷ்னர் மல்லிகா (தலைமையிடம்), துணை கமிஷ்னர் பெரோஸ்கான் அப்துல்லா (நிர்வாகம்), காவல் அதிகாரிகள் மற்றும் அமைச்சுப்பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

