தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக பெருமாள்சாமி அதிரடியாக நியமனம் : உற்சாகத்தில் காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள்!!
தூத்துக்குடி, ஜன, 19
தமிழ்நாடு மாநில ஐஎன்டியூசி பொதுச் செயலாளர், காங்கிரஸ் கட்சி மாநில பொது குழு உறுப்பினர், க.பெருமாள்சாமி தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக அதிரடியாக நியமிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் கட்சி மாவட்டத் தலைவர்கள் நியமனம் என்பது, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் (AICC) மேற்பார்வையில், மாநிலத் தலைமையும், மூத்த தலைவர்களும் இணைந்து, மாவட்ட வாரியாகக் கட்சி நிர்வாகிகளின் செயல்பாடுகள், களநிலவரம் ஆகியவற்றை ஆய்வு செய்து, புதிய நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்கும் செயல்முறையாகும்; சமீபத்தில் தமிழகத்தில் புதிய மாவட்ட தலைவர்களை நியமிக்க, பிற மாநிலங்களிலிருந்து மேலிடப் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு, நிர்வாகிகளை மாற்றி அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வந்தன அதன் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்டத்தில் மேலிடப் பார்வையாளர்கள் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டனர். இந்தப் பார்வையாளர்கள் மாவட்டங்கள் மற்றும் சட்டமன்றத் தொகுதிகளுக்குச் சென்று, தற்போதைய மாவட்டத் தலைவர்களின் செயல்பாடுகள் குறித்து உள்ளூர் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடம் கருத்து கேட்டார்கள் அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு கருத்து கேட்புக்கு பின்பு இளைஞர் என்ற முறையிலும், கட்சிப் பணியில் தீவிரமாக செயல்பட்டு வருபவர் என்றஅடிப்படையிலும் பெருமாள் சாமி கட்சி செயல்பாடுகளில் சிறந்து விளங்கியதாலும் , காங்கிரஸ் தொண்டர்கள் முதல் நிர்வாகிகள் வரை அனைவரிடமும் அன்பாகவும் எளிமையாக பழக கூடியவர் என்ற நற்பெயரை பெற்று விளங்கியதால் தூத்துக்குடி மாவட்டம் வந்த காங்கிரஸ் மேலிட பார்வையாளர்கள் பெருமாள்சாமியின் சிறப்பான செயல்பாடுகள் குறித்து அகில இந்தியத் தலைமையின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு, புதிய மாவட்டத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு கட்சி கட்டமைப்பை வலுப்படுத்தவும், செயல்பாடுகளைச் சீரமைக்கவும் இந்த நியமனங்கள் முக்கியமாகக் கருதப்படுகின்றன. இதுவரை தூத்துக்குடி மாவட்டத்தில் பெருமாள்சாமி தலைமையில் நடைபெறும் எந்த ஒரு பொதுக்கூட்டம், போராட்டங்கள், ஆர்ப்பாட்டம்,என எந்த நிகழ்ச்சி காங்கிரஸ் சார்பில் நடைபெற்றாலும் அதில் காங்கிரஸ் பேரியக்கத்தின் மூத்த நிர்வாகிகள் முதல் இளைஞர்கள், மகளிர்கள் என ஒரு பெருந்திரமான கூட்டம் எழுச்சி உடன் காணப்படும் அந்த அளவிற்கு காங்கிரஸ் பேரியக்கத்தில் தன்னை ஈடுபடுத்தி சிறப்பாக செயல்பட்டு விளங்கி வருகிறார் பெருமாள்சாமி அதோடு மட்டுமல்லாமல்் பெருந்தலைவர் காமராஜரை மிகவும் நேசிக்கக் கூடியவர் இவர் சமீபத்தில் காமராஜரை இழிவாக பேசியதாக திருச்சி சிவா, யூடியூப்பர் முக்தார் ஆகியோரைை கண்டித்து நடத்திய ஆர்ப்பாட்டம்் தூத்துக்குடி மாவட்ட வணிகர்கள், பொதுமக்கள், உட்பட அனைத்து தரப்பு மக்கள் மத்தியிலும் மிகுந்த வரவேற்பு பெற்றது அந்தளவிற்கு பெருமாள் சாமி தனது கண்டனத்தை பதிவு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இது ஒன்று அவரது செயல்பாடுகள் ஏராளம் இந்த நிலையில் தான் தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக அவர் அதிரடியாக நியமிக்கப்பட்டுள்ளார். வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலின் போது தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் கூட்டணி கட்சியினருடன் இணைந்து தீவிரமாக தேர்தல் களத்தில் ஈடுபடுவார் என்பதில் மாற்றுக் கருத்து இல்ல என காங்கிரஸ் மூத்த நிர்வாகிகளும் இளைஞர்களும் தெரிவிக்கிறார்கள். காங்கிரஸ் தலைவராக பெருமாள்சாமி நியமிக்கப்பட்டதால் தூத்துக்குடியில் காங்கிரஸ் கட்சியினர், மூத்த நிர்வாகிகள்், இளைஞர்கள் மிகுந்த உற்சாகத்துடன் காணப்படுகின்றன..

