குரும்பூர், டிச, 30
தூத்துக்குடி மாவட்டம், நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழியம் ஜெபக் கூடாரத்தில் ஆண்டு தோறும் ஜன. 1ஆம் தேதி புத்தாண்டு வாக்குத்தத்தக் கூட்டம் நடைபெறும். அதேபோல், நிகழாண்டும் மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரை 2026 புத்தாண்டு வாக்குத்தத்தக் கூட்டம் நடைபெறுகிறது. இயேசு விடுவிக்கிறார் ஜெபக்குழுவினர் பாடல்கள் பாடுகின்றனர்.இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் மோகன் சி. லாசரஸ் வாக்குத்தத்த செய்தி அளித்து,புத்தாண்டு ஆசீர்வாதத்திற்காக சிறப்புப் பிரார்த்தனை நடத்துகிறார்
கூட்டம் முடிந்தவுடன் அனைத்துப் பகுதிகளுக்கும் அரசு சிறப்பு பேருந்துகள் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏற்பாடுகளை ஊழிய நிறுவன பொது மேலாளர் செல்வக்குமார், ஜெபக்குழுவினர் செய்து வருகின்றனர்.கூட்டம் முடிந்தவுடன் அனைத்துப் பகுதிகளுக்கும் அரசு சிறப்பு பேருந்துகள் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏற்பாடுகளை ஊழிய நிறுவன பொது மேலாளர் செல்வக்குமார், ஜெபக்குழுவினர் செய்து வருகின்றனர்.
.