• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

காமராஜரை இழிவாக பேசிய யூடியூப்பர் முக்தாரை கைது செய்ய வலியுறுத்தி தூத்துக்குடியில் அனைத்து நாடார் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் : பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகள், அமைப்புகள் பங்கேற்பு!!

policeseithitv by policeseithitv
December 9, 2025
in 24/7 ‎செய்திகள், அரசியல், தமிழகம், முக்கிய செய்திகள்
0
காமராஜரை இழிவாக பேசிய யூடியூப்பர் முக்தாரை கைது செய்ய வலியுறுத்தி தூத்துக்குடியில் அனைத்து நாடார் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் : பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகள், அமைப்புகள் பங்கேற்பு!!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

காமராஜரை இழிவாக பேசிய யூடியூப்பர் முக்தாரை கைது செய்ய வலியுறுத்தி தூத்துக்குடியில் அனைத்து நாடார் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் : பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகள், அமைப்புகள் பங்கேற்பு!!

தூத்துக்குடி,டிச, 9

தமிழக முன்னாள் முதல்வர் காமராஜரை இழிவாக பேசிய யூடியூப்பர் முக்தாரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தூத்துக்குடியில் அனைத்து நாடார் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று 08.04.2025 மாலை 4 மணிக்கு விவிடி சிக்னல் அருகில் வைத்து நடைபெற்றது.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு

தமிழ்நாடு நாடார் பேரவை வழக்கறிஞர் பிரிவு மாநில தலைவர் எஸ்.ஜெயச்சந்திரன், பெருந்தலைவர் மக்கள் நல சங்கம் அமைப்பு நிறுவனத் தலைவர் எஸ்.பி. மாரியப்பன் ஆகியோர் தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பனங்காட்டு மக்கள் கழகம் மாநில வழக்கறிஞரணி செயலாளர் சிலுவை நாடார், தமிழ்நாடு நாடார் பேரவை தென்மண்டல தலைவர் பொன்ராஜ் சிவா, காமராஜர் லட்சிய பேரவை பிரசன்னா,ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளர்களாக  பங்கேற்ற அதிமுக முன்னாள் அமைச்சரும், மாநில வர்த்தக அணி செயலாளருமான சி.த.செல்லப்பாண்டியன், காங்கிரஸ் ஐஎன்டியூசி பொதுச் செயலாளர் பெருமாள்சாமி, தமிழக வெற்றிக்கழக மாவட்ட பொறுப்பாளர் அஜிதா அக்னல், தமிழ்நாடு பறையர் பாதுகாப்பு மாநில தலைவர் இளவரச பாண்டியன், சத்திரிய சான்றோர் படை ஹரி நாடார், தமிழ்நாடு வணிகர் பேரமைப்பு தூத்துக்குடி மாவட்ட தலைவர் விநாயகமூர்த்தி, பனங்காட்டு மக்கள் கழக மாநில செயலாளர் சொர்ணவேல் குமார், பனங்காட்டு மக்கள் கழக மாவட்ட செயலாளர் அற்புதராஜ்,, சமத்துவ மக்கள் கழகம் மாவட்ட செயலாளர் அற்புதராஜ், நாம்தமிழர் கட்சியை சார்ந்த ரூபன், தமிழ்நாடு பனை பொருள் வாரிய வாரிய உறுப்பினர் காங்கிரஸ் எடிசன், பாஜக காசிலிங்கம், மூத்த வழக்கறிஞர் ராஜ ஜெயபால் ஆகியோர் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினர். முக்தார் அகமதுவை கண்டித்து பல்வேறு நாடார் அமைப்பினரும் பல்வேறு சமுக அமைப்பினரும் கலந்து கொண்டு முக்தார் அகமதுவை தமிழ்நாடு அரசு கைது செய்யாததை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் பேசியதாவது : உலக அளவில் பெருந்தலைவர் என்ற பெயர் காமராஜர் ஒருவருக்கு பொருத்தமானது. இவரது ஆட்சி காலத்தில் மக்களின் வாழ்வாதாரமான குடிநீர் சீராக தங்கு தடையின்றி கிடைப்பதற்காக எத்தனை அணைக்கட்டுகள் கட்டி உள்ளார் , இதன் மூலம் பலரும் பயன்படுத்துகிறார்கள் அதுபோல் அனைத்து தரப்பு குழந்தைகள் படிக்க வேண்டும் என அவர் கொண்டு வந்த திட்டங்கள் ஏராளம் ஆகையால் கல்விக்கண் திறந்த காமராஜர் என்று போற்றப்படும் உத்தமத் தலைவரை இழிவாக பேசி தனது வயிற்று பிழைப்பு நடத்தி வரும் முக்தார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அனைத்து தரப்பு சமூகத்தினர்கள் மற்றும் அமைப்பினர்கள் காவல் நிலையத்தில் தொடர்ந்து புகார் அளித்த வரும் நிலையில் தமிழக அரசு இதுவரை ஒரு நடவடிக்கை எடுக்காமல் மௌனம் காத்து வருகிறது. இதை பார்க்கும் பொழுது திமுகவின் கைக்கூலியாக முக்தார் செயல்படுகிறார் என சந்தேகப்பட வேண்டியது உள்ளது. ஏற்கனவே திமுக எம்பி திருச்சி சிவா காமராஜரை இழிவாக பேசிய விஷயத்தில் தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் போராட்டங்கள் நடைபெற்றது இந்த விஷயத்திலும் திமுக அரசு மௌனம் சாதித்தது மட்டுமல்லாமல் திருச்சி சிவாவை கண்டிக்க கூடவில்லை இனியும் உத்தமத் தலைவர் காமராஜரை இழிவாக பேச யாரையும் அனுமதிக்காமல் கடுமையான நடவடிக்கை எடுக்க அரசு முன்வர வேண்டும். பெருந்தலைவர் காமராஜரை சிலர் இழிவாக பேசி வருவதை திமுக அரசு நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்ப்பது வேதனை அளிக்கிறது இது கண்டனத்துக்குரிய செயலாகும். என பேசினார்.  இதனைத் தொடர்ந்து பேசிய தமிழ்நாடு நாடார் பேரவை வழக்கறிஞர் பிரிவு மாநில தலைவர் ஜெயச்சந்திரன் பேசுகையில்: நாடார் சமுதாயத்தை இழிவு படுத்தியும், பெருந்தலைவர் காமராஜரின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் மை இந்தியா என்ற யூடியூப் சேனலில் ஜாதி ரீதியாக இழிவுபடுத்தி ஊடக கோமாளி முக்தார் அகமது பேசியுள்ளார். பல்வேறு ஆதாரமில்லாத தவறான தகவல்களை கூறி இழிவாக பேசி ஜாதி துவேசத்துடன், ஜாதி வெறியை தூண்டிவிட்டு அதன் மூலம் ஜாதி கலவரத்தை ஏற்படுத்தி தமிழகத்தில் மிகப் பெரிய அளவில் ஜாதி கலவரம் உருவாக வஞ்சக கூட்டு சேர்ந்து சதி திட்டம் தீட்டி, கூட்டு சதி செய்து பண ஆதாயத்திற்காக பொய்யான அவதூறுகளை சமூக வலைதளங்களில் பரப்பி விட்டு சிறுமைப்படுத்த வேண்டும் என்றும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டு, தேசவிரோத செயல்களில் ஈடுபட்டு தமிழ்நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தி அதன் மூலம் ஜாதி, மதகலவரம் தூண்ட திட்டமிட்டு செயல்பட்டு வரும் சமூக விரோதி முக்தார் அகமதுவையும் அவருக்கு பின்னணியில் இருந்து செயல்படும் சமூக விரோத கும்பல்கள் மீதும் புலன் விசாரணை செய்து உடனடியாக நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும். மேலும் மை இந்தியா என்ற யூடியூப் சேனலை முடக்கம் செய்து, மேற்படி காமராஜர் பற்றியும், நாடார் சமுதாயம் பற்றியும் எந்த வித ஆதாரமில்லாமல் இழிவாக பேசிய பதிவுகளை உடனடியாக நீக்கம் செய்ய வேண்டும் அல்லாவிடில் நீதிமன்றம் மூலம் சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்று பேசினார். மேலும் அதனைத் தொடர்ந்து பேசிய  பெருந்தலைவர் மக்கள் நல சங்கம் அமைப்பு நிறுவனத் தலைவர் எஸ்.பி. மாரியப்பன் பேசியதாவது, கல்விக்கண் திறந்த காமராஜரை திமுக எம்பி திருச்சி சிவா இழிவாக பேசிய போதும் மற்றும் பல்வேறு காலகட்டங்களில் காமராஜர் குறித்து இழிவாக பேசிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கூட தயங்கும் திமுக அரசை கண்டிக்கிறோம் . யூடியூப்பர் முக்தார் காமராஜரை இழிவாக பேசிய விஷயம் தமிழகத்தில் அனைத்து தரப்பு மக்களையும் மிகவும் பாதித்துள்ளது. ஜாதி மத பேதமின்றி அனைவரும் நேசிக்கும் உத்தமத் தலைவரை இழிவாக பேசிய முத்தார் மீது நடவடிக்கை எடுக்காமல் போலீஸ் பாதுகாப்பு கொடுத்து பாதுகாப்பது வேதனை அளிக்கிறது. உடனடியாக முக்தார் மீது நடவடிக்கை எடுத்து கைது செய்யாவிட்டால் தமிழகம் முழுவதும் ஒரு கோடி நாடார் சொந்தங்கள் மற்றும் காமராஜரை நேசிக்கும் அனைத்து தரப்பினரும் இணைந்து திமுக கொடிக்கு அருகில் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்  நடத்தப்படும். தமிழக முதல்வர் தேர்தல் பிரச்சாரம் செய்ய வரும் வழியில் கருப்புக் கொடி ஏந்தி நாடார் சொந்தங்கள் தங்கள் எதிர்ப்பை காட்டுவோம் எனவும் தெரிவித்தார். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சுமார் 100 பெண்கள் உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றார்கள்.

தூத்துக்குடியில் நடைபெற்ற இந்த மாபெரும் ஆர்ப்பாட்டத்திற்கு ஜாதி மதம் கட்சி பாகுபாடு இன்றி அனைத்து தரப்பினரும் பங்கேற்று தங்களது கண்டன உரையை பதிவு செய்தனர். என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு அமைப்புகளில் நிர்வாகிகள் வணிகர்கள் இளைஞர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் குவிந்ததால் தென்பாகம் காவல் ஆய்வாளர் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர்.

Previous Post

தூத்துக்குடி பண்டாரம்பட்டி கிராமத்தில் வணிகர்கள் மீது தாக்கப்பட்ட சம்பவம் ஜாதி பிரச்சனையாக உருவெடுக்காமல் தடுத்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்ட எஸ்.பி ஆல்பர்ட் ஜான், ஏஎஸ்பி மதன் ஆகியோருக்கு நன்றி தெரிவித்த பல்வேறு அமைப்புகள்!!!

Next Post

தூத்துக்குடி பிரஸ் கிளப் சார்பில் பாரதியார் பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாட்டம்!!

Next Post
தூத்துக்குடி பிரஸ் கிளப் சார்பில் பாரதியார் பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாட்டம்!!

தூத்துக்குடி பிரஸ் கிளப் சார்பில் பாரதியார் பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாட்டம்!!

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In