• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தமிழக முன்னாள் முதல்வர் கிங் மேக்கர் காமராஜர் குறித்து YouTube-ல் அவதூறாக பேசிய முக்தாரை உடனடியாக கைது செய்ய கோரி பெருந்தலைவர் மக்கள் நலச் சங்கம் அமைப்பு நிறுவன தலைவர் எஸ்.பி.மாரியப்பன் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார்!!!!

policeseithitv by policeseithitv
December 7, 2025
in 24/7 ‎செய்திகள், அரசியல், குற்றம், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தமிழக முன்னாள் முதல்வர் கிங் மேக்கர் காமராஜர் குறித்து YouTube-ல் அவதூறாக பேசிய முக்தாரை உடனடியாக கைது செய்ய கோரி பெருந்தலைவர் மக்கள் நலச் சங்கம் அமைப்பு நிறுவன தலைவர் எஸ்.பி.மாரியப்பன் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார்!!!!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழக முன்னாள் முதல்வர் கிங் மேக்கர் காமராஜர் குறித்து YouTube-ல் அவதூறாக பேசிய முக்தாரை உடனடியாக கைது செய்ய கோரி பெருந்தலைவர் மக்கள் நலச் சங்கம் அமைப்பு நிறுவன தலைவர் எஸ்.பி.மாரியப்பன் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார்!!!!

தூத்துக்குடி, டிச, 7

தமிழக முன்னாள் முதல்வர் கர்மவீரர் காமராஜரை இழிவுப்படுத்தி பேசிய முக்தாா் அகமது மீது உடனடியாக நடவடிக்கை எடுக்ககோாி
பெருந்தலைவர் மக்கள் நலச் சங்கம் அமைப்பு நிறுவன தலைவர் எஸ்.பி.மாரியப்பன் நேற்று 06/12/25
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜானிடம் புகார் அளித்தார்.
அந்த மனுவில் அவர் தெரிவித்திருந்ததாவது :
காமராஜர் பற்றியும் நாடார் சமூகத்தை பற்றியும் மிகவும் இழிவாகவும், அவதூறாகவும் முக்தார் அகமது என்பவர் தனது யூடியூப் சேனலில் நேர்காணல் என்ற பெயரில் பொய்யான அவதூறுகளை சமூக வலைதளங்களில் பரப்பி விட்டார் முக்தார் அகமது மற்றும் அவரது பின்னால் இருக்கும் சமூக விரோதிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடந்த 30.11.2025ம் தேதியில் மை இந்தியா 24*7 என்ற யூடியூப் சேனலில் முக்தார் அகமது என்பவர் கிறிஸ்தவ மதபோதகர் காட்பிரே நோபலிடம் நேர்காணல் எடுத்துள்ளார். அப்போது தமிழகத்தில் முன்னாள் முதலமைச்சர் காமராஜரையும் அயராத உழைப்பாலும், சிறு குறு வியாபாரிகளாகவும், தொழிலதிபர்களாகவும் சுயமாக வளர்ந்து கொண்டிருக்கும், நாடார் சமுதாயத்தையும் இழிவாக, உண்மைக்கு புறம்பான கருத்துக்களை கூறி ஒட்டுமொத்த நாடார் சமுதாயத்தையும் இழிவுப்படுத்தி கூட்டுசதி செய்து பண ஆதாயத்திற்காக பொய்யான சங்கதிளை கூறி மை இந்தியா 24*7 என்ற யூடியூப் சேனலில் முக்தார் அகமது என்பவர் முன்னாள் முதலமைச்சர் காமராஜாின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் அவரது ஆட்சிக் காலத்தில் ஊழல் துவங்கியது எனவும், காமராஜர் ஆட்சிக் காலத்தில் தான் சிவகாசியில் கள்ள நோட்டுகள் மற்றும் உணவு பொருட்களில் கலப்படம் இருந்தது என்றும், ஜாதி ரீதியாக இழிவுபடுத்தி பேசியுள்ளார். தன்னுடைய யூடியூப் சேனலை அதிகப்படியானவர்கள் பார்த்து தனக்கு அதிக வருமானம் வரவேண்டும் என்ற உள்நோக்கத்தில் திட்டமிட்டு முக்தார் அகமது இழிவாக பேசியுள்ளார். தமிழகத்தில் உள்ள
1 கோடிக்கும் அதிகமான நாடார் சமூகத்தினரை சிவகாசியில் கள்ள நோட்டுகள் மற்றும் உணவு பொருட்களில் கலப்படம் இருந்தது உள்ளிட்ட பல்வேறு ஆதாரமில்லாத தவறான தகவல்களை கூறி இழிவாக பேசி ஜாதி துவேசத்துடன், ஜாதி வெறியை தூண்டிவிட்டு அதன் மூலம் ஜாதி கலவரத்தை ஏற்படுத்தி தமிழகத்தில் மிகப் பெரிய அளவில் ஜாதி கலவரம் உருவாக வஞ்சக கூட்டு சேர்ந்து சதி திட்டம் தீட்டி, கூட்டு சதி செய்து பண ஆதாயத்திற்காக பொய்யான அவதூறுகளை சமூக வலைதளங்களில் பரப்பி விட்டு சிறுமைப்படுத்த வேண்டும் என்றும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டு, தேசவிரோத செயல்களில் ஈடுபட்டு தமிழ்நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தி அதன் மூலம் ஜாதி, மதகலவரம் தூண்ட திட்டமிட்டு செயல்பட்டு வரும் சமூக விரோதி முக்தார் அகமதுவையும் அவருக்கு பின்னணியில் இருந்து செயல்படும் சமூக விரோத கும்பல்கள் மீதும் புலன் விசாரணை செய்து உடனடியாக நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும். மேலும் மை இந்தியா 24*7 என்ற யூடியூப் சேனலை முடக்கம் செய்து, மேற்படி காமராஜர் பற்றியும், நாடார் சமுதாயம் பற்றியும் எந்த வித ஆதாரமில்லாமல் இழிவாக பேசிய பதிவுகளை உடனடியாக நீக்கம் செய்து நடவடிக்கை எடுக்குமாறு அளித்த கோாிக்கை மனுவில் தொிவித்துள்ளாா். இதனைத் தொடர்ந்து
தமிழ்நாடு அனைத்து வணிக சங்கங்களின் பேரமைப்பு மத்திய மாவட்ட தலைவர் பொன்ராஜ் சிவா,
தமிழ்நாடு நாடார் பேரவை வழக்கறிஞர் பிரிவு மாநில தலைவர் ஜெயச்சந்திரன்,
காமராஜர் லட்சியப் பேரவை நிறுவனத்தலைவர் பிரசன்னகுமார் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் அதன் நிர்வாகிகள் சார்பில் நேற்று மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் முக்தார் மீது உடனடியாக நடவடிக்கை வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மேற்கண்ட அனைத்து அமைப்புகளும் ஒன்றிணைந்து தூத்துக்குடி வணிகர்கள், அனைத்து சமுதாய மக்கள், முக்கிய பிரமுகர்கள் ஆகியோர் பங்குபெறும் மாபெரும் ஆர்ப்பாட்டம் நாளை 08/12/25  அன்று முத்தாரை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக தெரிய வருகிறது  இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு அமைப்பு நிர்வாகிகள் இளைஞர்கள் வியாபாரிகள் திரளாக பங்கேற்க உள்ளார்களாம்  காமராஜரை இழிவுபடுத்தி பேசிய விவகாரம்  தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Previous Post

டாக்டர் அண்ணல் அம்பேத்காரின் நினைவு நாள் – ஓட்டப்பிடாரம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் ஒன்றியச் செயலாளர் இளையராஜா மாலை அணிவித்து மரியாதை செய்தாா் !

Next Post

தூத்துக்குடி பண்டாரம்பட்டி கிராமத்தில் வணிகர்கள் மீது தாக்கப்பட்ட சம்பவம் ஜாதி பிரச்சனையாக உருவெடுக்காமல் தடுத்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்ட எஸ்.பி ஆல்பர்ட் ஜான், ஏஎஸ்பி மதன் ஆகியோருக்கு நன்றி தெரிவித்த பல்வேறு அமைப்புகள்!!!

Next Post
தூத்துக்குடி பண்டாரம்பட்டி கிராமத்தில் வணிகர்கள் மீது தாக்கப்பட்ட சம்பவம் ஜாதி பிரச்சனையாக உருவெடுக்காமல்  தடுத்து   அதிரடி நடவடிக்கை மேற்கொண்ட எஸ்.பி ஆல்பர்ட் ஜான்,  ஏஎஸ்பி மதன் ஆகியோருக்கு நன்றி தெரிவித்த பல்வேறு அமைப்புகள்!!!

தூத்துக்குடி பண்டாரம்பட்டி கிராமத்தில் வணிகர்கள் மீது தாக்கப்பட்ட சம்பவம் ஜாதி பிரச்சனையாக உருவெடுக்காமல் தடுத்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்ட எஸ்.பி ஆல்பர்ட் ஜான், ஏஎஸ்பி மதன் ஆகியோருக்கு நன்றி தெரிவித்த பல்வேறு அமைப்புகள்!!!

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In