============
கர்நாடகாவில் தொழிலதிபரை 2 கோடி ரூபாய் பணம் கேட்டு கடத்தி கொலை செய்த குற்றவாளியை போலீசார் துப்பாக்கியால் இரண்டு கால்களிலும் சுட்டுப் பிடித்தனர்.
கர்நாடக மாநிலம் பொம்ம சந்திரா பகுதியில் வசித்து வருபவர் ரவி பிரசாத் ரெட்டி, இவர் அப்பகுதியில் சீட்டு நடத்தி வந்துள்ளார். தொழிலில் பலத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது பணம் அதிகமாக தேவைப்பட்ட நிலையில், பணம் படைத்தவர்களை மிரட்டி பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டுள்ளார். அதன்படி கடந்த 4 ஆம் தேதி அங்குள்ள கித்தனஹள்ளி என்ற பகுதிக்கு சென்ற ரவி பிரசாத் ரெட்டி அவருக்கு நன்கு தெரிந்த மாதேஷ் என்பவரிடம் பணம் கேட்டுள்ளார். அவர் கொடுக்காததால் அவரை கொலை செய்துள்ளார். இந்த வழக்கில் ஹெப்பகோடி போலீசார் விசாரணை நடத்தி குற்றவாளியை தேடி வந்தனர், அதனைத் தொடர்ந்து ரவி பிரசாத் ரெட்டி பணத்திற்காக கடந்த 6 ஆம் தேதி தொழிலதிபர் பாலப்பாரெட்டி என்பவரை 2 கோடி ரூபாய் பணம் கேட்டு மிரட்டி ஜிகினி உள்வட்ட சாலையில் கடத்தி சென்றுள்ளார். வேறொரு செல்போனில் அவரது குடும்பத்தினரிடம் பணம் கேட்டுள்ளார். பணம் ஏதும் வராததால் அவரை வெட்டி கொலை செய்து தமிழக எல்லையான ஓசூர் அருகே உள்ள சானமாவு வனப்பகுதியில் உடலை வீசி சென்றுள்ளார்.
பாலப்பா ரெட்டி கடத்தல் வழக்கில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி குற்றவாளியை தேடி வந்த நிலையில் குற்றவாளி ரவி பிரசாத் ரெட்டி என்பது தெரியவந்தது. இவர் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் பல வருடங்களாக கர்நாடகாவில் வசித்து வருகிறார். ரவி பிரசாத் ரெட்டி தான் பணத்திற்காக மாதேஷ் மற்றும் பாலப்பா ரெட்டி ஆகிய இருவரையும் கொலை செய்தது போலீஸ் சார் விசாரணையில் தெரியவந்தது. அவரை நேற்று இரவு போலீசார் கைது செய்ய சென்றபோது அவர் போலீசார் மீது தாக்குதல் நடத்தி உள்ளார். இதில் தலைமை காவலர் அசோக் என்பவர் காயமடைந்தார் இன்ஸ்பெக்டர் சோம சேகர் பாதுகாப்புக்காக வானத்தில் இரண்டு முறை துப்பாக்கியால் சுட்டு விட்டு அவரை பிடிக்க முயன்றுள்ளார் ஒரு கட்டத்தில் ரவி பிரசாத் ரொட்டியின் இரண்டு கால்களிலும் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தி அவரை பிடித்துள்ளனர். காயம் அடைந்துள்ள குற்றவாளி ரவி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் சுட்டுப் பிடிக்கப்பட்ட ரவி பிரசாத் ரெட்டி கொடுத்த தகவலின் பேரில் ஓசூர் அருகே சானமாவு வனப்பகுதியில்இரவு பாலப்பா ரெட்டியின் அழுகியபிரேதத்தை கைப்பற்றி கர்நாடக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

