• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

100-க்கும் மேற்பட்ட எந்திர தீப்பெட்டி தொழிற்சாலைகள் கதவடைப்பு போராட்டம்

policeseithitv by policeseithitv
March 23, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
100-க்கும் மேற்பட்ட எந்திர தீப்பெட்டி தொழிற்சாலைகள் கதவடைப்பு போராட்டம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter
தீப்பெட்டிக்கு கூடுதல் விலைகேட்டு நேற்று முதல் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள 100-க்கும் மேற்பட்ட எந்திர தீப்பெட்டி தொழிற்சாலைகள் கதவடைப்பு போராட்டம் தொடங்கியது. 31-ந்தேதி வரை போராட்டம் நடக்கிறது
தமிழகத்தில் தூத்துக்குடி, விருதுநகர், தென்காசி மாவட்டங்கள் மற்றும் வேலூர் மாவட்டம் குடியாத்தம், தர்மபுரி மாவட்ட காவேரிபட்டணம் ஆகிய இடங்களில் சுமார் 400 எந்திர தீப்பெட்டி தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. கடந்த 2 மாதங்களாக தீப்பெட்டி உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்களான அட்டை, பேப்பர், குச்சி, மெழுகு, குளோரேட் போன்ற மூலப்பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. அதே போல், பெட்ரோல், டீசல் விலை, சுங்கச்சாவடி கட்டணம் ஆகியவற்றின் உயர்வு காரணமாக லாரி வாடகை கணிசமாக உயர்ந்துள்ளது. இதன் மூலம் தீப்பெட்டியின் அடக்கச்செலவு நாளும் அதிகரித்த வண்ணம் உள்ளது. ஆனால், தீப்பெட்டியின் கொள்முதல் அதிகரிக்கப்படவில்லை.
எனவே, மூலப் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தி தமிழ்நாடு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கம், நேஷனல் சிறுத்தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் நேற்று முதல் 31-ந்தேதி வரை 10 நாட்கள் கதவடைப்பு போராட்டம் நடத்த முடிவு செய்திருந்தனர். அதன்படி, நேற்று தமிழகத்தில் உள்ள தீப்பெட்டி ஆலைகள் மூடப்பட்டன. தீப்பெட்டி ஆலைகளை பொறுத்தவரை 90 சதவீதம் பெண்கள் தான் பணியாற்றி வருகின்றனர். மேலும், தீப்பெட்டி பண்டல்கள் அனுப்புவதும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் பெண்கள் மட்டுமின்றி, சுமை தூக்கும் தொழிலாளர்கள் என 4 லட்சம் பேர் வரை வேலையிழந்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி, எட்டயபுரம், கழுகுமலை, கடம்பூர், விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 100-க்கும் மேற்பட்ட தீப்பெட்டி தொழிற்சாலைகள் நேற்று மூடப்பட்டன. இதில் பணியாற்றி வரும் தொழிலாளர்கள், சுமை தூக்கும் தொழிலாளர்கள் உள்ளிட்ட 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வேலையிழந்துள்ளனர்.
Previous Post

தூத்துக்குடி மாவட்டத்தில் 1 கோடியே 20 லட்சம் பணம் பறிமுதல் – ஆட்சியர் செந்தில்ராஜ்

Next Post

தேவகோட்டையில் பாஜக முன்னாள் எம்பி இல.கணேசன் எச்.ராஜாவை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம்.

Next Post
தேவகோட்டையில் பாஜக முன்னாள் எம்பி இல.கணேசன் எச்.ராஜாவை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம்.

தேவகோட்டையில் பாஜக முன்னாள் எம்பி இல.கணேசன் எச்.ராஜாவை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In