தூத்துக்குடி மாநகராட்சி கிழக்கு மண்டலத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் :
255 மனுக்கள் வரப்பெற்றதில் 221 மனுக்களுக்கு தீர்வு மேயர் ஜெகன் பொியசாமி தகவல்


தூத்துக்குடி கடந்த ஆண்டு ஜீன் மாதம் 28ம் தேதி நடைபெற்ற மாநகராட்சி கூட்டத்தில் ஓவ்வொரு புதன்கிழமையிலும் ஓரு மண்டலத்திலும் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டதின் அடிப்படையில் பழைய நகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமிற்கு மேயர் ஜெகன் பொியசாமி தலைமை வகித்தாா். ஆணையா் பானோத் ம்ருகேந்தா்லால், துணை மேயா் ஜெனிட்டா ஆகியோர் முன்னிலை வகித்தாா். மண்டலத்தலைவர் கலைச்செல்வி வரவேற்புரையாற்றினாா்.
முகாமை தொடங்கி வைத்து மேயா் ஜெகன் பொியசாமி பேசுகையில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க இந்த முகாம் நடைபெறுகிறது. ஏற்கனவே பொதுமக்கள் மாநகராட்சி இணையதளத்தில் தங்களது பதிவுகளை பதிவு செய்து வருகின்றன. அதை முறையாக பார்வையிட்டு அந்த பணிகளும் ஓருபுறம் நடைபெற்று வருகிறது. இருந்தாலும் இந்த குறைதீர்க்கும் முகாம் கடந்த 14 மாதங்களாக 4 மண்டலங்களிலும் நடைபெற்று வருகிறது. இதற்கு பொதுமக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு இருக்கிறது. அதனடிப்படையில் தொடர்ந்து இதுபோன்ற முகாம்கள் நடைபெறுகிறது. இங்கு ஏற்கனவே இதுவரை பெறப்பட்ட மனுக்கள் 723ல் 694 தீர்வு காணப்பட்டுள்ளது. 29 மனுக்கள் நடவடிக்கையில் உள்ளன. பெயர் மாற்றம் முகவாி மாற்றும் பிறப்பு இறப்பு சான்றிதழ்கள் போன்றவைக்கு பொதுமக்கள் கொடுக்கும் மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்படுகிறது.
மாநகராட்சி பகுதி முழுவதும் பாரபட்சமின்றி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்கள் நலன் கருதியே இந்த முகாம்கள் நடைபெறுவதால் மகிழ்ச்சியடைகின்றனா். ஏற்கனவே உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்று கொண்டிருக்கிறது. அதில் 13 துறைகளின் கீழ் 43 ஓதுக்கீடு உள்ள திட்டங்களின் மனுக்கள் மூலம் தீர்வு காணப்படும். வகையில் கிழக்கு மண்டலத்தில் 255 மனுக்கள் வரப்பெற்றதில் 221 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. 34 மனுக்கள் நடவடிக்கையில் உள்ளன. மற்ற மனுக்களுக்கு சம்பந்தப்பட்ட வீடுகளுக்கு சென்று ஆய்வு மேற்கொண்ட பின் அதற்கான தீர்வு காணப்படும். வாாிசு தாரா்கள் என்றால் நோட்டிஸ் வழங்கப்பட்டு அந்த வாாிசு தாரா்கள் நோில் ஆஜராக வேண்டும். 10 ஆண்டு அதிமுக ஆட்சியில் எந்தவிதமான சேவையும்இல்லாமல் இருந்தது தற்போது மாநகராட்சி சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது. இந்த கிழக்கு மண்டலம் தான் ஆரம்பத்தில் நகராட்சியாக இருந்த பகுதியாகும் பின்னா் தான் விாிவாக்கம் செய்யப்பட்டு மாநகராட்சியாக தரம் உயா்ந்துள்ளது. 3 வருடத்தில் மாநகராட்சி நல்லமுறையில் செயல்பட்டு வளர்ச்சியடைந்தது. வரும் காலங்களில் மேலும் பல திட்டங்களில் மூலம் வளர்ச்சியடைய உள்ளது. ரோச்பாா்க் முத்துநகா் கடற்கரை, இருந்து வருகிறது. உலக தரம் வாய்ந்த நீச்சல்குளம் முத்துநகா் கடற்கரையில் வருகிறது. மீனவா்களுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் அதுஉருவாக்கப்படவுள்ளது. வஉசி கல்லூாி முன்பு புதிதாக விளையாட்டு மைதானத்துடன் திறக்கப்பட்டுள்ளதற்கு மக்களிடம் நல்லவரவேற்பு இருந்து வருகிறது. இதுபோன்று மேலும் பல இடங்களில் அமைக்கப்படவுள்ளன. கடற்கரை சாலையை தூய்மையான நடைபாதையாக 8 கிலோமீட்டம் தூரம் முக.ஸ்டாலின் அறிவித்தாா். அந்த சாலையில்ஓரு பகுதியில் மட்டும் நடைபயிற்சி மேடை இருந்து வருகிறது. அதுபோன்று இன்னொரு பகுதியிலும் அமைக்கப்படும். பொங்கலுக்குள் எல்லாம் அமைக்கப்பட்டு முடிவுபெறும் நாடாளுமன்ற தோ்தலின்போது டபிள்யுஜிசி ரோடு பேவா்பிளாக் கல் பதிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோாிக்கை வைத்துள்ளனா். முத்துநகா் கடற்கரையிலிருந்து சென்ட்மோீஸ் கல்லூாிவரை இருபுறமும் பேவா் பிளாக் கற்கள் பதிக்கப்படவுள்ளன. தெப்பக்குளம் உங்களுக்கு நன்றாகவே தொியும் நீண்ட நாட்களாக நல்லமுறையில் பராமாிக்க வேண்டும் என்று கோாிக்கை வந்ததையடுத்து விரைவில் நவீன வசதிகளை உருவாக்கி கிரனைட் கற்கள் பதிக்கப்பட்டு நீர்வீழ்ச்சி அமைக்கப்படவுள்ளது. அதே போல் முதியோருக்கான பூங்கா 2ம் கேட் உள்பட பல பகுதிகளில் புதியபூங்காக்கள் அமைக்கப்படவுள்ளன. பொதுமக்கள் நலனும் அவா்களது ஆரோக்கியமும் மாசு இல்லாத மாநகரமும் உருவாக வேண்டும். அதற்கேற்றாற்போல் தான் மாநகராட்சி நிா்வாகம் பணியாற்றி வருகிறது. ஆகஸ்ட்மாதம் துவங்கி விட்ட நிலையில் இனி மழைகாலம் தொடங்கி விடும் கடந்த காலத்தில் ஏற்பட்டதை போல் பாதிப்பு வராதநிலையில் 11 வழித்தடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அதில் மழைநீர் கடல்பகுதிக்கு சென்று விடும். அனைவரும் மாநகராட்சி நிா்வாக நடவடிக்கைக்கு ஓத்துழைப்பு அளிக்க வேண்டும். எல்லா பகுதிகளுக்கும் பாரபட்சமின்றி பணிகள் நடைபெறும் என்று பேசினாா். பின்னா் பிறப்புஇறப்பு பெயா்மாற்றும் என 5 பேருக்கு உடனடியாக ஆணைகளை வழங்கினாா்.
நிகழ்ச்சியில் துணை ஆணையா் சரவணக்குமாா், உதவிஆணையர் வெங்கட்ராமன், பொறியாளர் தமிழ்செல்வன், உதவி பொறியாளர் சரவணன், நகரமைப்பு திட்ட உதவி செயற்பொறியாளர்கள் காந்திமதி, முனீர்அகமது, சுகாதார ஆய்வாளர் ெநடுமாறன். இளநிலை பொறியாளர்கள் பாண்டி, அமல்ராஜ், உதவி பொறியாளர்கள் நித்யகல்யாணி, அனுசவுந்தா்யா, அபிலாவண்யா, தொழில்நுட்ப உதவியாளர்கள் சரன்பிரசாத், சஜித், சுகாதார குழு தலைவர் சுரேஷ்குமாா், கவுன்சிலர்கள் ராமுஅம்மாள், எடின்டா, தனலட்சுமி, பேபி ஏஞ்சலின், ஜான்சிராணி, ரெக்ஸ்லின், மும்தாஜ், மாியகீதா, வட்ட செயலாளர்கள் ரவீந்திரன், பொன்ராஜ் போல்பேட்டை பகுதி பிரதிநிதிகள் பிரபாகா், ஜேஸ்பா், மேயாின் நேர்முக உதவியாளர் ரமேஷ், ஆணையாின் நோ்முக உதவியாளா் துரைமணி, உள்பட பொதுமக்கள் அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

