தூத்துக்குடி,
தாமிரபரணி வடகால் கோரம்பள்ளம் குளம் நீரினை பயன்படுத்துவோர் சங்க தலைவர் பூபதிநாடார், செயலாளர் ரகுபதி என்ற சின்னராஜ், பொருளாளர் கந்தசாமி சின்னகுட்டி, துணைத்தலைவர் திருமால், ஒருங்கிணைப்பாளர் ஜோதிமணி, ஆட்சிமண்டல உறுப்பினர் அகஸ்டின், ஜெபராஜ், தானியேல் ஆகியோர் அத்திமரப்பட்டி பகுதி விவசாய நலன் கருதி கூடுதலாக தண்ணீர் வடகால் வழியாக திறந்து எங்கள் நலன் கருதி வாழை விவசாயத்தை பாதுகாக்க வேண்டும் என்று வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, கலெக்டர் இளம்பகவத் ஆகியோருக்கு கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று ஸ்ரீவைகுண்டம் வடகாலில் அதிகமாக தண்ணீர் திறக்க அதற்கான அதிகாரிகளை அறிவுறுத்தி உள்ளதால், விவசாயிகளுக்கு தேவையான தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
விவசாயிகளின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றிக் கொடுத்த அமைச்சர் கீதாஜீவனை எட்டையாபுரம் சாலையில் கலைஞர் அரங்கில் தாமிரபரணி வடகால் கோரம்பள்ளம் குளம் நீரினை பயன்படுத்துவோர் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் நேரில் சந்தித்து சால்வை அணிவித்து நன்றி தெரிவித்தார். கொண்டனர்.

