தூத்துக்குடி மாவட்ட வணிகவியல் பள்ளிகள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் பனிமய மாதா கோயில் வளாகத்தில் உள்ள ஓசானம் டெக்னிக்கல் இன்ஸ்டியூட்டில் நடைபெற்ற கூட்டத்தில் தலைவர் இன்பராஜ் வரவேற்புரையாற்றினாா். காமராசர் பிறந்த நாள், புரவலர் டி.ஜி.எஸ். 92வது பிறந்த நாள் விழா மற்றும் 56வது சங்க தின விழாவினை சேர்த்து முப்பெரும் விழாவாக அவா்களது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்கள்.
கூட்டத்தில் மாவட்ட செயலாளர் நாராயணன் கூறுகையில் தமிழக அரசாணை எண் 187ஐ ரத்து செய்ய வேண்டும் கணினி பயன்படுத்துவதில் தமிழ் 99 விசைப்பலகை வேண்டாம் இதன் மூலம் தட்டச்சு தொழில் அழியும் நிலையில் உள்ளது. ஆதலால் எப்போதும் போல் தமிழ் தட்டச்சு இயந்திரத்தில் உள்ள விசைப்பலகை வேண்டும் என்றும் கம்ப்யூட்டர் ஆன் ஆபிஸ் ஆட்டோமேஷன் கணினித் தேர்வுக்கு குறைந்தபட்ச கல்வித் தகுதியான தட்டச்சு ஆங்கிலம் அல்லது தமிழ் இளநிலை இருந்தால் தான் சிஓஏ கணினி தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையினை கடந்த நான்கு மாத காலமாக தட்டச்சு பயிற்சி உரிமையாளர்கள் சார்பாக அனைத்து மாவட்ட கலெக்டாிடமும் அனைத்து துறை அமைச்சரிடமும் மனு கொடுத்து இதுவரை எந்த முடிவும் எட்டவில்லை என்பதை பற்றி ஒருவருக்கொருவர் ஆதங்கத்துடன் தெரிவித்தனர். இதற்கெல்லாம் நல்ல முடிவு வரும் என்று நம்பிக்கையோடு இருப்போம் என்று மாவட்ட செயலாளர் நாராயணன் கூறினார். பொருளாளர் கார்மேகம் நன்றி கூறினார்.

