தூத்துக்குடி வருகை தரும் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு பிரம்மாண்ட வரவேற்பு கொடுக்க மகளிர் அணியினருக்கு இரட்டை இலை சின்னம் பொறிக்கப்பட்டது சேலைகள் வழங்கி அசத்திய முன்னாள் அமைச்சர் சி.த செல்லப்பாண்டியன்
உற்சாகத்தில் அதிமுகவினர்..




மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என்ற உன்னத நோக்கத்தை லட்சியமாகக் கொண்டு 01.08.25 வெள்ளிக்கிழமை அன்று தூத்துக்குடி வருகை தரும் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு பிரம்மாண்ட வரவேற்பு கொடுக்க மகளிர் அணியினருக்கு இரட்டை இலை சின்னம் பொறிக்கப்பட்ட சேலைகள் வழங்கி அசத்தினார், முன்னாள் அமைச்சர் சி.த செல்லப்பாண்டியன்
தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கும் வகையில் கடந்த 17ஆம் தேதி முன்னாள் அமைச்சர் செல்லப்பாண்டியன் தலைமையில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டம் அதிமுக தொண்டர்கள் எழுச்சியால் மாநாடு போல் காட்சி அளித்தது . அன்றைய தினம் எடப்பாடி பழனிச்சாமிக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்க பல்வேறு முக்கிய நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. குறிப்பாக தமிழக முன்னாள் முதல்வர் தூத்துக்குடி வருகையின் போது பல்வேறு பாய்ண்ட்களில் உற்சாக வரவேற்பு கொடுக்கும் வகையில் முடிவெடுக்கப்பட்டது . அது போல் அன்று வருகை தரும் எடப்பாடியாரை பிரசித்தி பெற்ற மாதா கோவில் திருவிழாவிற்கு செல்வதற்கு செல்லப்பாண்டியன் முன்னேற்பாடு பணிகளை சிறப்பாக செய்துள்ளார். செய்துள்ளார். செய்து வருகிறார். இந்தத் தொடர் அதிரடி நடவடிக்கையால் தூத்துக்குடி அதிமுகவினர்
உற்சாகத்தில் காணப்படுகின்றனர்.
எடப்பாடி பழனிச்சாமி தூத்துக்குடி வருகையின் போது மகளிர் அணி சார்பில் கும்பம் எடுத்து வரவேற்பது, ஆரத்தி எடுப்பது என பல நிகழ்வுகள் முன்னாள் அமைச்சர் செல்லப்பாண்டியன் தலைமையில் நடைபெறுவதால் தூத்துக்குடி டுவிபுரத்தில் உள்ள
அதிமுக மாநில வர்த்தக அணி அலுவலகத்தில் இன்று முன்னாள் அமைச்சரும், அதிமுக மாநில வர்த்தக அணி செயலாளருமான மாண
சி.த.செல்லப்பாண்டியன்
கழக மகளிர் அணியினருக்கு இரட்டை இலை சின்னம் பொறித்த சேலைகளை தனது கரங்களால் வழங்கப்பட்டது. பின்னர் அவர் தூத்துக்குடிக்கு வருகை தரும் கழகப் பொதுச் செயலாளரும் வருங்கால முதல் வருமானம் எடப்பாடி யாருக்கு மிகப் பிரம்மாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன, தூத்துக்குடி மாவட்ட மகளிர் அணி பங்கு பெரிதளவு இருக்க வேண்டும் என்றும் கூறினார் அமைச்சர் செல்லபாண்டியன் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில்,
மாவட்ட மகளிர் அணி துணைச் செயலாளர் சண்முகத்தாய்,
மத்திய வடக்கு பகுதி சிறுபான்மை பிரிவு செயலாளர் அசன், அண்ணா தொழிற்சங்க போக்குவரத்து பிரிவு சங்கர்,
மாவட்ட பிரதிநிதி சாந்தி,முன்னாள் யூனியன் கவுன்சிலர்
பெருமாள்தாய்,மகளிர் அணியினர்,
ஜான்சி,அன்னத்தாய் மல்லிகா,
முத்து லெட்சுமி,மாரியம்மாள்,
ஆகியோர் உடனிருந்தனர்.

