• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தமிழக அரசு மற்றும் நீதிமன்றத்தால் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக போராட்டம், ஆர்ப்பாட்டம் என கூறி பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் : பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் அமைப்பு நிறுவனத் தலைவர் எஸ்.பி. மாரியப்பன் தமிழக டிஜிபிக்கு புகார் மனு

policeseithitv by policeseithitv
July 22, 2025
in 24/7 ‎செய்திகள், அரசியல், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தமிழக அரசு மற்றும் நீதிமன்றத்தால் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக போராட்டம், ஆர்ப்பாட்டம் என கூறி பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் : பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் அமைப்பு நிறுவனத் தலைவர் எஸ்.பி. மாரியப்பன் தமிழக டிஜிபிக்கு புகார் மனு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழக அரசு மற்றும் நீதிமன்றத்தால் மூடப்பட்ட ஸ்டெர்லைட்
ஆலைக்கு ஆதரவாக
போராட்டம், ஆர்ப்பாட்டம் என கூறி பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் : பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் அமைப்பு நிறுவனத் தலைவர் எஸ்.பி. மாரியப்பன் தமிழக டிஜிபிக்கு புகார் மனு

தூத்துக்குடி, ஜூலை 22

தமிழக அரசு மற்றும் நீதிமன்றத்தால் மூடப்பட்ட ஸ்டெர்லைட்
ஆலைக்கு ஆதரவாக
போராட்டம், ஆர்ப்பாட்டம் என கூறி கொண்டு பொதுமக்களுக்கு அச்சுறுத்தல், மற்றும் பதற்றத்தை ஏற்படுத்தும் சில அமைப்புகள் மற்றும் நபர்கள் மீது தமிழக காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் : பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் அமைப்பு நிறுவனத் தலைவர் எஸ்.பி. மாரியப்பன் தமிழக டிஜிபிக்கும், தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோருக்கு புகார் மனு அனுப்பியுள்ளார். அந்தப் புகார் மனுவில் அவர் தெரிவித்ததாவது :
வணக்கம், நான் பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் அமைப்பின் நிறுவனத்தலைவராக உள்ளேன். சமூக சேவைகள் மூலம் பொதுமக்கள் நலன் கருதி பல்வேறு நற்பணிகளை மேற்கொண்டு வருகிறேன். பொதுமக்களுக்கு ஏற்படும் குறைகள் குறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் அரசு நிர்வாகத்திற்கு எங்களது அமைப்பின் மூலம் பல்வேறு விசயங்களை அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்கிறோம்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடந்த போராட்டத்தில் 2018 மே 22 அன்று போலீசார் துப்பாகி சூடு நடத்தினர். இந்த துப்பாக்கி சூட்டினால் 13 பேர் உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். அதனை தொடர்ந்து தூத்துக்குடி மக்களின் வேதனைக்கு மருந்து போடும் வகையில் நீதிமன்றம் மற்றும் தமிழக அரசின் கொள்கை முடிவுக்கு கட்டுப்பட்டு கடந்த ஏழு ஆண்டுகளாக ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளது. இதனால் தூத்துக்குடி மக்கள் மத்தியில் அச்சம் விலகி அமைதி பூங்காவாக விளங்கி வரும் தூத்துக்குடியில் தற்போது புதிதாக கிளம்பி வரும் ஸ்டெர்லைட் ஆலை ஆதரவு அமைப்பு எதிர்ப்பு அமைப்பு என்று கூறிக்கொண்டு பேரணிகள், ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. கடந்த சில மாதங்களாக வாரந்தோறும் திங்கள் கிழமை மக்கள் குறை தீர்க்கும் முகாமின் போது மாவட்ட ஆட்சியரை சந்தித்து ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டுமென மனு அளிப்பதாக முதலில் 50 பேர், 100 பேர் என்று சில அமைப்புகளின் பெயரை கூறிக்கொண்டு வந்தனர்கள். கடந்த சில வாரங்களாக தூத்துக்குடியை பகுதியை சாராதவர்கள் ஸ்டெர்லைட் ஆலை அமைந்துள்ள பகுதியை சுற்றியுள்ளவர்கள் ஒருசிலரே அடையாளம் தெரியக் கூடிய நபராகவும் பல ஆயிரக்கணக்கான நபர்கள் பஸ், வேன் மூலம் திங்கள் கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பணம் கொடுத்து வரவழைக்கப்பட்டு அவர்கள் மூலம் ஆலையை திறக்க வலியுறுத்தி மனு கொடுப்பதாக வரவழைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஒரு போராட்டம் வாரந்தோறும் நடைபெறுகிறது. இதனால் ஒரு பதட்டமான சூழ்நிலை நிலவிவருகிறது. இவர்களால் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலும், சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் வகையிலும் காவல் துறையினர் அனுமதியின்றி கூட்டம் கூடுவதால் தூத்துக்குடியில் உள்ள பொதுமக்கள் மத்தியில் ஒருவித அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் பழியான குடும்பங்கள் மற்றும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான எதிர்ப்பாளர்கள் மீண்டும் போராட்டத்தில் இறங்க வாய்ப்புள்ளது. அப்படியொரு நிலை வந்தால் தூத்துக்குடியில் மீண்டும் ஒரு அசாதாரண சூழ்நிலை உருவாகும்.
ஆகையால், தமிழக அரசு மற்றும் உளவுத்துறை விழிப்புடன் கண்காணிப்புகளில் ஈடுபட்டு தூத்துக்குடி மக்களின் நிம்மதி பெரு மூச்சுக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் ஸ்டெர்லைட் ஆலை ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்கள் என்று கூறி பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் செயல்படும் அமைப்புகள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் வகையில் வாரந்தோறும் திங்கள் கிழமை குறைதீர்க்கும் முகாம் கூட்டத்தில் கலந்து கொள்வது போல் சட்டம் ஒழுங்கு பிரச்சனை பங்கம் விளைக்கும் வகையில் அசாதாரண சூழ்நிலையை உருவாக்கி வருகிறார்கள்.
ஆகையால், சமூகம், தமிழக உள்துறை, உளவுதுறை போலீசார் மூலம் இதுகுறித்து தீவிரமாக விசாரணை செய்து தூத்துக்குடி மக்கள் என்ற போர்வையில் பல மாவட்டங்களிலிருந்து இறக்குமதி செய்யப்படும் போராளிகள் மீது கடுமையான கிரிமினல் சட்டப்பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்து தூத்துக்குடியில் பொதுமக்களின் பாதுகாப்பையும் பொதுஅமைதியையும் நிலைநாட்டிட வேண்டும் என பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் அமைப்பின் சார்பில் வேண்டுகிறேன். இவ்வாறு தனது புகார் மனுவில் நிறுவனத் தலைவர் எஸ் பி மாரியப்பன் தெரிவித்துள்ளார்.

Previous Post

காமராஜரை இழிவாக பேசிய திமுக எம்பி திருச்சி சிவா 10 தினங்களுக்குள் பகிரங்க மன்னிப்பு கேட்காவிட்டால் தூத்துக்குடியில் அனைத்து தரப்பினரையும் ஒன்று திரட்டி மிகப்பெரிய போராட்டம் நடைபெறும் – எஸ்.பி.மாரியப்பன் பேச்சு

Next Post

எடப்பாடி பழனிசாமி ஆக.1ஆம் தேதி தூத்துக்குடி வருகை தந்து பனிமய மாதா பேராலய 443-ம் ஆண்டு விழாவில் பங்கேற்று வழிபாடு செய்கிறார்! முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் பனிமய மாதா பங்குத்தந்தை ஸ்டார்வினை மரியாதை நிமித்தமாக சந்தித்து தகவலை தெரிவித்தார்.

Next Post
எடப்பாடி பழனிசாமி ஆக.1ஆம் தேதி தூத்துக்குடி வருகை தந்து பனிமய மாதா பேராலய 443-ம் ஆண்டு விழாவில் பங்கேற்று வழிபாடு செய்கிறார்! முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் பனிமய மாதா பங்குத்தந்தை ஸ்டார்வினை மரியாதை நிமித்தமாக சந்தித்து தகவலை தெரிவித்தார்.

எடப்பாடி பழனிசாமி ஆக.1ஆம் தேதி தூத்துக்குடி வருகை தந்து பனிமய மாதா பேராலய 443-ம் ஆண்டு விழாவில் பங்கேற்று வழிபாடு செய்கிறார்! முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் பனிமய மாதா பங்குத்தந்தை ஸ்டார்வினை மரியாதை நிமித்தமாக சந்தித்து தகவலை தெரிவித்தார்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In