தூத்துக்குடி மாவட்டத்தில் மாப்பிள்ளையூரணி, சிலுவைப்பட்டி உட்பட பகுதிகளில் உள்ள வாக்குச் சாவடி மையங்களில் எஸ்பி ஜெயக்குமார் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் மாப்பிள்ளையூரணி, சிலுவைப்பட்டி, டீ.சவேரியார்புரம், தாளமுத்துநகர், இராஜபாளையம், அலங்காரதட்டு, சாமுவேல்புரம் மற்றும் திரேஸ்புரம் ஆகிய பகுதிகளில் உள்ள வாக்குசாவடி மையங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் நேரில் சென்று ஆய்வு செய்து, அனைத்து வாக்குச் சாவடிகளிலும் அடிப்படை வசதிகள் உள்ளனவா என்றும், அப்பகுதிகளில் சட்டம், ஒழுங்கு பிரச்சனைகள் ஏதும் உள்ளனவா என்றும், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் சம்மந்தப்பட்ட காவல் நிலைய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி தகுந்த அறிவுரைகள் வழங்கினார். ஆய்வின்போது வடபாகம் காவல் நிலைய ஆய்வாளர் அருள், தாளமுத்துநகர் காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் மகாராஜா மற்றும் திருமணி உட்பட காவல்துறையினர் உடனிருந்தனர்.

