================
தூத்துக்குடி,
ஏப்ரல் 20
தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பயனாளிகளுக்கு பட்டா வழங்கும் நிகழ்ச்சி டூவிபுரம் சட்ட மன்ற உறுப்பினர் அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது.
பொதுமக்கள் தங்கள் குடியிருக்கும் வீடுகளுக்கு கணினி பட்டா கேட்டு பல ஆண்டுகளாக அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்த நிலையில் அவர்கள் கனவு நிறைவேறும் விதமாக
கடந்த மாதம் தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் கணினிபட்டா கோரி மனு அளிப்பதற்கு ஏதுவாக முகாம் ஒன்று அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டது இருந்தது.

இந்த முகாமில் சுமார் 4,000 க்கு மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டு அவர்களுக்கு விரைவில் படிப்படியாக கணினி பட்டா வழங்க ஏற்பாடு செய்யப்படும் என அமைச்சர் கீதா ஜீவன் உத்தரவிட்ட நிலையில் ஏற்கனவே இரண்டு கட்டமாக தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் வைத்து பொதுமக்களுக்கு கணினி பட்டா வழங்கப்பட்டுள்ளது
நேற்று (19.04.2025)
3 வது கட்டமாக 105 பயனாளிகளுக்கு
அமைச்சர் கீதா ஜீவன் கணினி பட்டா வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சரும், வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான அமைச்சர் கீதா ஜீவன், தெரிவித்ததாவது பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்று வகையில் படிப்படியாக அனைவருக்கும் கணினி பட்டா வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்
இந்தநிகழ்ச்சியில் மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், தாசில்தார் முரளிதரன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் அபிராமி நாதன், துணை மேயர் ஜெனிட்டா மாமன்ற உறுப்பினர்கள் ராமகிருஷ்ணன் சரவணகுமார், பொன்னப்பன், அதிஷ்ட மணி, ராஜதுரை, ஜான் சீனிவாசன், பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

