• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தமிழக அமைச்சர் பொன்முடி பெண்கள் குறித்து அவதூறாகப் பேசியதற்கு வழக்குப்பதிவு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு! வழக்குப்பதிவு செய்யாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும்,  டிஜிபி உடனடியாக விளக்கம் அளிக்கவும் உத்தரவு! நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அதிரடி!!

policeseithitv by policeseithitv
April 17, 2025
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தமிழக அமைச்சர் பொன்முடி  பெண்கள் குறித்து அவதூறாகப் பேசியதற்கு வழக்குப்பதிவு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு!  வழக்குப்பதிவு செய்யாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும்,   டிஜிபி உடனடியாக விளக்கம் அளிக்கவும் உத்தரவு!  நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அதிரடி!!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

 

===============

பெண்கள் குறித்து அவதூறாகப் பேசிய புகாரில் அமைச்சர் பொன்முடி மீது வழக்குப் பதிவு செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நிகழ்ச்சி ஒன்றில் விலைமாதர், சைவ, வைணவம் குறித்து அமைச்சர் பொன்முடி சர்ச்சையான கருத்துகளைக் கூறியதால், அவர் மீது பல்வேறு தரப்பினரிடையே கண்டனங்கள் எழுந்தது. இதனையடுத்து, கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து, அமைச்சர் பொன்முடி நீக்கப்பட்டார்.

இந்நிலையில்,

பொன்முடியை அமைச்சர் பதவியில் நீக்கக் கோரி வழக்கறிஞர் பி.ஜெகநாத் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார். அதில், மக்கள் பிரதிநிதி என்ற முறையில், அமைச்சர் பொன்முடியின் பேச்சு, அரசியல் சாசனத்திற்கு எதிரானது என கூறியுள்ளார். இந்நிலையில்

அமைச்சர் பொன்முடிக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று(ஏப். 17) விசாரணைக்கு வந்தது.

அப்போது பொன்முடி பேசியதை திரையிட செய்த நீதிபதி, “பொன்முடி வழக்கில் 5 புகார்கள் பெறப்பட்டுள்ளது. பொன்முடியின் அவதூறு பேச்சுக்கு விடியோ ஆதாரம் உள்ளது. வழக்குப்பதிவு செய்யாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும்.

பொன்முடியின் பேச்சுக்கு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை தமிழக டிஜிபி இன்று மாலைக்குள் விளக்கம் அளிக்க வேண்டும்.

இதே பேச்சை வேறு யாராவது பேசி இருந்தால் இந்நேரம் 50 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருக்கும். யாரும் சட்டத்துக்கு மேலானவர்கள் அல்ல.” என்று தெரிவித்து வழக்கின் விசாரணையை ஒத்தி வைத்தார். நீதிபதியின் இந்த அதிரடி உத்தரவு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Previous Post

தமிழ்நாட்டு மக்களை காப்பாற்ற கடவுள் நினைத்து உருவாக்கப்பட்டது தான் அதிமுக -பாஜக வெற்றி கூட்டணி : தூத்துக்குடியில் நீர் மோர் பந்தல் திறப்பு நிகழ்ச்சியின் போது முன்னாள் அமைச்சர் சி.த.  செல்லப்பாண்டியன் பரபரப்பு பேட்டி!!

Next Post

சிலுவைப்பாதை ஊர்வலத்தில்  கலந்து கொண்ட பல்லாயிரக்கணக்கான கிறிஸ்தவ மக்களின் சோர்வை போக்க சுட்டெரிக்கும்  வெயிலையும் பொருட்படுத்தாமல்   தவெக மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் : செய்த மனிதநேய செயல் அனைத்து தரப்பு மக்கள் மத்தியிலும் குவியும் பாராட்டுக்கள் !!

Next Post
சிலுவைப்பாதை ஊர்வலத்தில்   கலந்து கொண்ட பல்லாயிரக்கணக்கான  கிறிஸ்தவ மக்களின்  சோர்வை போக்க சுட்டெரிக்கும்   வெயிலையும் பொருட்படுத்தாமல்    தவெக மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் :  செய்த மனிதநேய செயல் அனைத்து தரப்பு மக்கள் மத்தியிலும் குவியும் பாராட்டுக்கள் !!

சிலுவைப்பாதை ஊர்வலத்தில்  கலந்து கொண்ட பல்லாயிரக்கணக்கான கிறிஸ்தவ மக்களின் சோர்வை போக்க சுட்டெரிக்கும்  வெயிலையும் பொருட்படுத்தாமல்   தவெக மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் : செய்த மனிதநேய செயல் அனைத்து தரப்பு மக்கள் மத்தியிலும் குவியும் பாராட்டுக்கள் !!

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In