தூத்துக்குடி,
ஏப்ரல், 17
கோடை வெயிலின் தாக்கத்தைத் தணிக்கும் வகையில் தூத்துக்குடியில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தலைக் கட்சியின் மாநில வர்த்தக அணி செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சி.த. செல்லப்பாண்டியன் திறந்து வைத்தார்.
தமிழ்நாட்டில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வெயிலில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ள பொதுமக்கள் பல்வேறு வழிகளைக் கையாண்டு வருகின்றனர்.
கோடை வெயிலின் தாக்கத்தைத் தணிக்கும் வகையில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தலைக் தமிழகம் முழுவதும் திறக்க முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி ஆணைக்கிணங்க அதிமுக சார்பில் பல்வேறு இடங்களில் நீர் மோர் பந்தல் அதிமுகவினரால் திறக்கப்பட்டு
வருகிறது. அதன்படி
தூத்துக்குடி வ உ சி மார்க்கெட் முன்புறம் அமைக்கப்பட்ட நீர் மோர் பந்தலை
தூத்துக்குடி தெற்கு மாவட்ட வர்த்தக அணி செயலாளர் துரைசிங், சிறப்பாக ஏற்பாடு
செய்திருந்தார் இந்த நீர் மோர் பந்தலை அதிமுக மாநில வர்த்தகஅணி செயலாளரும் முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் திறந்து வைத்து
பொதுமக்களுக்கு
நீர் மோர், பதநீர்,நுங்கு, இளநீர், குளிர்பானங்கள் வெள்ளரிப்பிஞ்சு, தர்பூசணி பழம் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களை பொதுமக்களுக்கு இலவசமாக அவர் வழங்கினார். நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகளும் நீர் மோரினை பெற்றனர்.
முன்னதாக நீர்மோர் பந்தல் திறப்பு விழாவிற்கு வருகை தந்த முன்னாள் அமைச்சர் செல்லப்பாண்டியனை தூத்துக்குடி தெற்கு மாவட்ட வர்த்தக அணி செயலாளர் துரைசிங், தலைமையில் அதிமுக நிர்வாகிகள் பலரும்
பொன்னாடை போர்த்தி வரவேற்றார்.
இதில் சுமார் 100 க்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள், மகளிர்கள், தொண்டர்கள் முன்னாள் அமைச்சர் செல்ல பாண்டியனுக்கு பொன்னாடை போர்த்தி உற்சாக வரவேற்பளித்தனர்.
நீர் மோர் பந்தல் திறப்பு நிகழ்ச்சிக்கு
பின்னர் செய்தியாளரிடம் பேசிய முன்னாள் அமைச்சர் சித்தா செல்ல பாண்டியன் பேசியதாவது :
தமிழ்நாட்டு மக்களை காப்பாற்ற கடவுள் நினைத்து உருவாக்கப்பட்டது தான் அதிமுக -பாஜக வெற்றி கூட்டணி என்று தெரிவித்த அவர் அதிமுக பாஜக கூட்டணி குறித்து முதல்வர் மு க ஸ்டாலினுக்கு ஏன் இவ்வளவு அக்கறை
அவர் தற்போது பயத்தில்தான் உலறுகிறார் இது வெற்றி கூட்டணியாக அமைந்துவிட்டது என்று. காங்கிரசும் திமுகவும் ஒரு காலகட்டத்தில் இனி எந்த காலத்திலும் கூட்டணி இல்லை என்று பேசினார்கள்
தற்போது நிலைமை என்ன? ஆகையால் அரசியலில் கருத்து வேறுபாடுகள் இருக்கும் ஆனால் கூட்டணி என்ற விஷயத்தில் மாறுபாடுகள் இருக்கும் என்பதை முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கு தெரியாதா? அதிமுக பாஜக கூட்டணி என்பது தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வருவதற்கு வித்திட்ட வெற்றிக் கூட்டணி ஆகும் என்றும் தெரிவித்தார். மேலும் தமிழக அமைச்சர் பொன்முடி இந்து மக்களை மிகவும் அருவருக்கத்தக்க வார்த்தைகளால் பேசி உள்ள நிலையில் அவரது அமைச்சர் பதவியை கூட நீக்க முடியாத தாங்கள் என்ன நிர்வாகம் செய்து விட முடியும் என கடுமையாக முன்னாள் அமைச்சர் சி.த செல்லப்பண்டின் பேசினார்.
பின்னர் அவர் அதிமுக ஆட்சியின் சாதனைகளையும்j திமுக ஆட்சியில் உள்ள வேதனைகளையும்
எடுத்து கூறினார். அதுபோல் தற்போது திறக்கப்பட்டுள்ள நீர் மோர் பந்தலை அமைப்பாளர் நாள்தோறும் பராமரித்து அனைத்து வகை குளிர்பானங்களும் வைத்து பொதுமக்களின் தாகம் தீர்க்க வேண்டும் என தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில்,
தூத்துக்குடி தெற்கு மாவட்ட துணை செயலாளர் சந்தனம், தூத்துக்குடி தெற்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் சேகர், தூத்துக்குடி தெற்கு மாவட்ட வர்த்தக அணி செயலாளர் துரைசிங், தூத்துக்குடி வடக்கு மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் ஜீவா பாண்டியன்,
தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர்
பி.டி.ஆர் ராஜகோபால்,
டாஸ்மாக் அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் விஜயகுமார்,
தமிழ்நாடு மீன்வள கூட்டுறவு இணைய இயக்குனர், தூத்துக்குடி மீனவர் கூட்டுறவு சங்கத் தலைவர், முன்னாள் மாமன்ற உறுப்பினர் எஸ்.அகஸ்டின்.
தூத்துக்குடி மாவட்ட மீனவணி துணை தலைவர் டெலஸ்பர், முன்னாள் மத்திய கூட்டுறவு பண்டகசாலை தலைவர் எட்வின் பாண்டியன், முன்னாள் மாவட்ட எம்.ஜி.ஆர் மற்ற துணை செயலாளர் சகாயராஜ், தூத்துக்குடி அதிமுக 46 வட்ட செயலாளர், கிழக்கு பகுதி தலைவர், கிழக்கு பகுதி எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர், புல்டன் ஜெசின், மத்திய வடக்கு பகுதி சிறுபான்மை பிரிவு செயலாளர் அசன், முன்னாள் நகர் மன்ற துணை தலைவர், ரத்தினம், வட்ட செயலாளர்கள் லயன்ஸ் டவுன் சகாயராஜ் ஜெனோபர், அருண்குமார், ஸ்ரீவைகுண்டம் கிழக்கு ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் ராஜேஷ் குமார், மாவட்ட பிரதிநிதிகள் செல்லப்பா, சாந்தி, முன்னாள் எம் ஜி ஆர் மன்ற இணைச் செயலாளர் தெர்மல் முருகேசன், முன்னாள் மேலூர் கூட்டுறவு வங்கி தலைவர் என்.சிவசுப்பிரமணியன், இயக்குனர் அன்புலிங்கம், முன்னாள் வட்ட செயலாளர்கள் மோகன், பாக்யராஜ், முன்னாள் யூனியன் கவுன்சிலர்கள், தருவை அமல தாசன், பெருமாள் தாய், போக்குவரத்து பிரிவு நிர்வாகிகள் டெரன்ஸ், பெலிக்ஸ், சகாயராஜ், சங்கர், ராஜேந்திரன், பேச்சியப்பன், சிறுபான்மை பிரிவு அனிஸ்டஸ், பிரபாகரன், அபுதாஹிர், மற்றும் அந்தோனி ராஜ், பாபநாசம், அந்தோனி செல்வராஜ், துறைமுகம் ராஜ்குமார், மகராஜன், தளவாய் புரம் காசி, ஆறுமுகம், சித்திரை வேல், மணிகண்டன், நயினார், சுப்புராஜ், ஜோதிகா மாரி,ஆபிரகாம், முனியசாமி, ராஜசேகர், வெங்கடாசலம், பொன்ராஜ், ஆறுமுகம், ராஜேஷ், அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி நடராஜன், மகளீர் அணியினர் ஜிபுலியா, பபினாம்மா, பாப்பா, முத்துமாரி, மாரியம்மாள், லெட்சுமி உட்பட கட்சி தொண்டர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். நேற்று கடந்த வாரம் தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் அருகே அதிமுக சார்பில் நீர் மோர் பந்தலை முன்னாள் அமைச்சர் செல்லபாண்டியன் திறந்து வைத்த நிலையில் அதனைத் தொடர்ந்து தூத்துக்குடி ராஜாஜி வாட்டர் டேங் பூங்கா முன்பு நீர்மோர் பந்தல் திறந்து வைக்கப்பட்டது. தற்போது வ உ சி மார்க்கெட் முன்பு நேற்று நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டது. தூத்துக்குடி மாநகர் பகுதியில் அதிமுக சார்பில் பொது மக்களின் நலன் கருதி கோடை வெயிலை கருத்தில் கொண்டு முன்னாள் அமைச்சர் சி. த செல்ல பாண்டியன் தலைமையில் பல்வேறு நீர் மோர் பந்தல் தொடர்ந்து திறக்கப்பட்டு வருகிறது. இந்த நிகழ்வு பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்று வருகிறது.

