தூத்துக்குடி, மார்ச், 16
அமமுக பொதுச் செயலாளர் தினகரன் ஆணைக்கிணங்க தென் மண்டல பொறுப்பாளர் மாணிக்கராஜா ஆலோசனையின் படியும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் 8ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு மாநகர் மாவட்ட செயலாளர் ஜானியல் சாலமோன் மணிராஜ் தலைமையில் வடக்கு மாவட்ட செயலாளர் பூலோக பாண்டியன் முன்னிலையில் சிதம்பரம் நகர் பகுதியில் அமைந்துள்ள பாச கரங்கள் முதியோர் இல்லத்தில் உள்ளவர்களுக்கு உணவும் பின்னர் பிரையன்ட் நகர் பகுதியில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகளும் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியியில் அமைப்புசாரா ஓட்டுனர் அணி இணை செயலாளர் பெரியசாமி மாநில மகளிர் அணி துணைச் செயலாளர் சண்முககுமாரி பொதுக்குழு உறுப்பினர் ராமேஸ்வரி ஒன்றிய செயலாளர்கள் தேவப்பிரியன் அயில்குமார் பகுதி செயலாளர்கள் தாவீது பொன் நடராஜன் மாரிமுத்து ததயூஸ் பொன் பாண்டியன் தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநகர் மாவட்ட செயலாளர் சிவராஜா மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் வீர புத்திரன் ஆறுமுகம் சேகர் மருது பாண்டியன் குமார் பால்பாண்டி கொம்பையா பாண்டியன் துரைச்சி திருமலை தங்கம் ஹரிஹரன் மருது பிரவீன் குமார் வினோத் மற்றும் வட்ட செயலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாரிமுத்து பெரியசாமி செய்திருந்தனா்.
