மார்ச்,16.
எடப்பாடி பழனிசாமியை மீண்டும் முதல்வராக்க அயராது உழைக்க வேண்டும் என செங்கல்பட்டு மாவட்டத்தில் நடைபெற்ற பாக கிளை கழக உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற அதிமுக மாநில வர்த்தக அணி செயலாளரும்
முன்னாள் அமைச்சருமான
சி.த. செல்லப்பாண்டி யன் பேசினார்.
2026 சட்டமன்ற தேர்தல் முன்னிட்டு அதிமுக பாக கிளை கழக உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதன்படி
இன்று( 16.03.25 )
செங்கல்பட்டு மேற்கு மாவட்டம்,
காட்டாங்குளத்தூர் வடக்கு ஒன்றியம்,
மண்ணிவாக்கம் ஊராட்சி,
வண்டலூர் ஊராட்சி
ஊனமாஞ்சேரி ஊராட்சி
ஓட்டேரி விரிவு பகுதி
ஆகிய பகுதிகளில்
ஒன்றிய கழக செயலாளர் எம். கஜா என்ற கஜேந்திரன் தலைமையில்
ஒன்றிய அவைத் தலைவர்கள்.லெட்சுமணன்,பொண்ணுச்சாமி,ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக அதிமுக வர்த்தக அணி மாநில செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சி.த.செல்லப்பாண்டியன் அவர்களும்,மாவட்ட கழக செயலாளர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிட்லபாக்கம் ச.இராசேந்திரன்,
அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற துணைச்செயலாளர் நாவலூர் முத்து ஆகியோர் கலந்துக்கொண்டு ஆலோசனை வழங்கினார்கள். இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் சி.த செல்லப்பாண்டியன் பேசியதாவது :
அ.தி.மு.க. இயக்கத்தின் 28 ஆண்டுகாலம் பொதுச் செயலாளராக பொறுப்பேற்று அம்மா பல்வேறு சாதனைகளை
உருவாக்கி காட்டினார்கள். அவரது மறைவிற்குப் பிறகு பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடியார் சிறந்த ஆட்சியை தமிழக மக்களுக்கு கொடுத்தார்.

தமிழகத்தில் மீண்டும் எடப்பாடியாரை முதல்- அமைச்சராக அரியணையில் அமர்த்திட அனைவரும் அயராது உழைத்திட வேண்டும் எனவும்
அடுத்த ஆண்டு (2026) சட்டசபை பொதுத் தேர்தல் வருகிறது. இந்த தேர்தலில் நாம் இமாலய வெற்றியை
பெற்று புரட்சித்தலைவர் மற்றும் புரட்சித்தலைவி ஆகியோரின் பொற்கால ஆட்சியை
தமிழகத்தில் மீண்டும் அமர்த்திட எடப்பாடியாரை முதல்வராக்கி அரியணையில் அமர வைக்க நாம் ஒவ்வொருவரும் தீவிரமாக செயலாற்ற வேண்டும். அதிமுக ஆட்சியில் மக்கள் பயன்பாட்டுக்காக
கொண்டுவரப்பட்டு ஏராளமான திட்டங்களை பற்றியும் வருங்காலங்களிலும் திட்டங்கள் தொடரும் என உறுதி கூறும் வகையில் அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட எண்ணிலடங்காத
திட்டங்கள் குறித்து மக்கள் மத்தியில் நீங்கள் மீண்டும் மீண்டும் எடுத்துச் சொல்ல வேண்டும். திண்னைப் பிரசாரங்கள், தெருமுனை கூட்டங்கள், பொதுக்கூட்டங்கள் வாயிலாகவும் பிரசாரம் செய்ய வேண்டும். இது மட்டுமின்றி வீடு வீடாக துண்டுப் பிரசுரம் மூலமும் அதிமுக ஆட்சியின் சாதனைகளை எடுத்துச் சொல்ல வேண்டும். என முன்னாள் அமைச்சரும் அதிமுக மாநில வர்த்தக அணி செயலாளருமான
சி.த செல்லப்பாண்டியன் பேசினார்.இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட வர்த்தக அணி செயலாளர் துரைசிங்,மற்றும்
செங்கல்பட்டு மேற்கு மாவட்டம்.மாவட்ட கழக நிர்வாகிகள்,
ஒன்றிய கழக நிர்வாகிகள்*
கிளைகழக நிர்வாகிகள்,
ஒன்றிய சார்பு அணி பொறுப்பாளர்கள் ஏராளமானோர் கலந்துக்கொண்டனர்.

