தூத்துக்குடி,
மார்ச் 15
தூத்துக்குடியில் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் நடத்திய மகளிர் தின விளையாட்டு போட்டிகளை முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் பங்கேற்று துவக்கி வைத்தார்.
தூத்துக்குடி மாநகராட்சி மகளிர் சுயஉதவிக்குழுக்கள் நடத்தும் மகளிர் தின விழா 15-03-2025, சனிக்கிழமை 16-03-2025, ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு தினங்கள் தூத்துக்குடி அருகேயுள்ள முத்தையாபுரம்
கே.டி.கே கோசல்ராம் உயர்நிலைப்பள்ளியில் வைத்து நடைபெறுகிறது.

இந்த விழாவில்
முன்னாள் தமிழக அமைச்சரும்
அதிமுக மாநில வர்த்தகஅணி செயலாளருமான
சி.த. செல்லப்பாண்டியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு
விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில்
வடக்கு மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் ஜீவா பாண்டியன்,
வட்ட செயலாளர் மில்லை ஆர் எல் ராஜா,
அரசு போக்குவரத்து கழக தூத்துக்குடி மண்டல முன்னாள் இணைச் செயலாளர் சங்கர்,
வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர் கௌதம் பாண்டியன்,
போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல சங்க மாநில பொருளாளர் பேச்சியப்பன்
உப்பு தொழிலாளர் சங்கம் சிவசாமி
வட்ட பிரதிநிதிகள்
ஐய்யப்பன்,ராஜசேகர்ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழா ஏற்பாடுகளை
சுபபிரியா
*(DRDA கலெக்டர் அலுவலகம்)
ஆயிஷா
சமுதாய வளப்பயிற்றுநர், மகளிர் திட்டம்,
முத்துசெல்வி
வட்டார வளப்பயிற்றுநர், BRP மகளிர் திட்டம்,
ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

