==============
தூத்துக்குடி பிரஸ் கிளப் நிர்வாகிகள் வேண்டுகோளுக்கு இணங்க தூத்துக்குடி விமான நிலையத்தில்
செய்தியாளர்கள் பயன்படுத்துவதற்கு சிறப்பான வகையில் மைக் ஸ்டான்ட் அமைத்துக் கொடுத்தது பாஜக ஓபிசி அணியின் மாநிலத் துணைத் தலைவர் விவேகம் ரமேஷ் அவர்கள்
தென்காசி மாவட்டம் புளியங்குடியில் பாஜக பொதுக் கூட்டத்திற்கு பங்கேற்பதற்காக
இன்றைய தினம் காலை 11. 40 மணி யளவில் தூத்துக்குடி விமான நிலையம் வருகை தந்த பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் பாஜக நிர்வாகி விவேகம் ரமேஷ் ஏற்பாட்டில் விமான நிலையத்தின் வாசலில் அமைக்கப்பட்ட பிரம்மாண்டமான
இந்த மைக் ஸ்டாண்டை பிரஸ் கிளப் தலைவர் சண்முகசுந்தரம், பிரஸ் கிளப் செயலாளர் மோகன்ராஜ், பிரஸ் கிளப் பொருளாளர்
ராஜு ஆகியோரிடம் ஒப்படைத்தார்.

பிரஸ் கிளப் நிர்வாகிகள் பாஜக தலைவர் அண்ணாமலைக்கு பூங்கொத்து கொடுத்து பொன்னாடை போற்றி நன்றி தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் சங்க ஆலோசகர், மூத்த பத்திரிகையாளர் எம். ஆத்திமுத்து, செயற்குழு உறுப்பினர்கள் லட்சுமணன், முத்துராமன், கண்ணன், ராஜன்,
மாரி ராஜா, சங்க கவுரவ ஆலோசகர் பாலகிருஷ்ணன், மாரிமுத்து, மணிகண்டன்,,
முரளி கணேஷ், மாணிக்கம்,உட்பட ஏராளமான மன்ற உறுப்பினர்கள். பங்கேற்றனர். தூத்துக்குடிக்கு வருகை தந்த பாஜக தலைவர் அண்ணாமலை விமான நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்ட மைக் ஸ்டாண்டில் முதல் நபராக செய்தியாளர் சந்திப்பு நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சந்திப்பின் போது முன்னாள் எம்பி பாஜக மாநிலத் துணைத் தலைவர் சசிகலா புஷ்பா, தூத்துக்குடி மாவட்ட தலைவர் சித்தாரங்கன், மற்றும் பாஜக தொண்டர்கள் நிர்வாகி பெருந்திரளாக கலந்து கொண்டு அண்ணாமலைக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

