• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிமக்கள் நலன் தான் முக்கியம், சுகாதார பணிகள் ஆய்வு கூட்டத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி பேசினார்

policeseithitv by policeseithitv
February 13, 2025
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடி மாநகராட்சி பகுதிமக்கள் நலன் தான் முக்கியம், சுகாதார பணிகள் ஆய்வு கூட்டத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி பேசினார்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

 

தூத்துக்குடி.

இந்தியாவின் 12 முதன்மைத் துறைமுகங்களில் தூத்துக்குடி வஉசி துறைமுகம் முக்கிய இடம் வகிக்கிறது. இத்துறைமுகத்திலிருந்து ஐக்கிய அமெரிக்கா, ரஷ்யா, சீனா, ஐரோப்பா, ஐப்பான், இலங்கை மற்றும் நடுநிலக் கடல் நாடுகளுக்கு ஏற்றுமதி – இறக்குமதி நடைபெறுகிறது.

தூத்துக்குடி மாநகரமானது அனைத்து வகையான போக்குவரத்து வசதிகளையும் உள்ளடக்கி தென்னிந்தியாவிலேயே மிக வேகமாக வளர்ந்து வரும் மிகப்பெரிய துறைமுக மாநகரமாக உருவாகி வருகிறது. குறிப்பாக, கனரக வாகனங்கள் வந்து செல்லும் வகையில் தேசிய நெடுஞ்சாலை வசதி, இரயில் மற்றும் விமானப் போக்குவரத்து மூலம் நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் நன்கு இணைக்கப்பட்டுள்ளது

இங்கு தயாராகும் உப்பு, ஆசியாக் கண்டத்திலேயே மிகச் சிறந்த உப்பாக பெயர் பெற்று விளங்குகிறது. இதனால் நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் உப்பு வியாபாரிகள் வந்து செல்கின்றனர்.

அதுமட்டுமல்லாமல், ஜவுளி துறை, அனல்மின்நிலையம், கெமிக்கல் நிறுவனங்கள், உரத்தொழிற்சாலை மற்றும் பல்வேறு தொழிற்சாலைகள் நிறைந்த நகரமாக வளர்ந்து வருகிறது. தொழில் நகரமாக வேகமான வளர்ச்சியையும் நகர்ப்புற விரிவாக்கத்தையும் கருத்தில் கொண்டு நகர்ப்புற வளர்ச்சி மற்றும் நகரவளர்ச்சித் திட்ட துறை தூத்துக்குடி நகரைச் சுற்றியுள்ள கிராமங்களை நகர்ப்புற வளர்ச்சித்திட்டத்தில் சேர்த்து நகரத்தின் வளர்ச்சியை முறையாக மேலாண்மை செய்து வருகிறது.

தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக அனைத்து போக்குவரத்து வசதிகளும் அடங்கிய மாநகராக தூத்துக்குடி விளங்கி வருவதால், நாளுக்கு நாள் மக்கள் தொகையும் வாகனப் பெருக்கமும் போக்குவரத்து நெரிசலும் அதிகரித்த வண்ணம் உள்ளது.

 

தூத்துக்குடி மாவட்ட தலைநகரான தூத்துக்குடி மாநகரத்தின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு, நகர்புற கட்டமைப்பு வசதிகளை அனைத்து பகுதிகளுக்கும் செய்து கொடுக்கும் கடமை மாநகராட்சிக்கு உண்டு.

மாநகராட்சி மேயராக ஜெகன் பெரியசாமி பொறுப்பேற்ற பின், தூத்துக்குடிக்கு வருகை தந்த முதலமைச்சர் ஸ்டாலின் மழைநீர் பாதிக்கப்பட்ட பல பகுதியை பார்வையிட்டு சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்து அதிகாரிகள் மற்றும் மேயரிடம் இதுபோன்ற நிலை அடுத்து வரும் மழை காலத்திற்குள் பாதிப்பு ஏற்படாதவாறு அதற்கான கட்டமைப்பு வசதிகளை முறையாக செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார். இதனையடுத்து அந்த பகுதியில் மாநகராட்சி சார்பில் புதிய கழிவுநீர் கால்வாய் வசதிகள், சாலை வசதிகள் செய்தும், பக்கிள் ஓடை பகுதியில் அமலைச் செடிகள் அகற்றப்பட்டும் பல்வேறு பகுதிகளில் பணிகள் மின்னல் வேகத்தில் நடைபெற்றன. கடந்த காலத்தில் மழை காலங்களில் ஏற்பட்ட பாதிப்புகள் இந்த மழைகாலத்தில் பெருமளவு பாதிப்பு இல்லாத நிலை காணப்பட்டது.

தூத்துக்குடி வஉசி துறைமுகம் கிரீன் கேட் பகுதியில் இருந்து கலெக்டர் அலுவலகம் வரை 6 வழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் ஆணையர் மதுபாலன் முன்னிலையில் சுகாதார பணிகள் விரைவுப் படுத்தும் விதமாக அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. அப்போது, மேயர் ஜெகன் பெரியசாமி பேசுகையில்: நமது மாநகராட்சி பகுதி மக்கள் நலன் கருதி எல்லா வகையிலும் எல்லா பகுதியிலும் சுகாதாரத்தை பேணி பாதுகாக்க வேண்டும். எவ்வித தொற்றுநோய்கள், டெங்கு காய்ச்சல் போன்றவை வராமல் காத்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு மனிதருடைய ஆரோக்கியத்திலும் நமக்கு அக்கறை உண்டு என்பதை கருத்தில் கொண்டு பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

கூட்டத்தில் நகர்நல அலுவலர் அரவிந்த்ஜோதி, மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னர் மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவிக்கையில்: கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்ட பல திட்டங்கள் ஆமை வேகத்தில் நடைபெற்றன. வருங்கால தலைமுறையினரின் மக்கள் நலன் பற்றி சிறிதும் சிந்திக்காமல் கடமைக்கு பணியாற்றினார்கள். இதையெல்லாம் கருத்தில் கொண்டு தான் திமுக ஆட்சி பொறுப்பேற்று உள்ளாட்சி தேர்தல் முழுமையாக நடைபெற்ற பின் பொறுப்புக்கு வந்த நாள் முதல் மக்களுக்கு தேவையான அனைத்து கட்டமைப்பு பணிகளையும் எவ்வித தொய்வுமின்றி முதலமைச்சர் ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி அனைத்து பணிகளும் நடைபெறுகிறது. அதிலும் குறிப்பாக, 60 வார்டுகளிலும், கட்சி பாகுபாடின்றி மக்கள் நலன் தான் முக்கியம் என்று பணியாற்றி வருகிறோம். எதிர்வரும் காலங்களில் தூத்துக்குடி மாநகராட்சி பகுதி மழைநீர் தேங்காமல் பசுமையான பகுதியாகவும், மாசு இல்லாத மாநகராகவும் உருவாக்கி காட்டுவதே எங்களது இலட்சியம். மற்ற கட்சியினரை போல் கடமைக்கு பணியாற்றாமல் கடமை உணர்வோடு பாரபட்சமின்றி பணியாற்றி வருகிறோம். தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகளில் சிறந்த மாநகராட்சி தூத்துக்குடி என்ற நிலையை உருவாக்க அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்போடு பணியாற்றுகிறோம். என்று தெரிவித்தார்.

Previous Post

பெருந்தலைவர் காமராஜர் கல்வெட்டை இடித்து சேதப்படுத்திய சமூக விரோதிகளை உடனடியாக கைது செய்து  கல்வெட்டை மீண்டும்  சீர் செய்து உடனடியாக அதில் நிறுவ வேண்டும் : : தமிழக அரசுக்கு  பெருந்தலைவர் மக்கள் கட்சி மாவட்டச் செயலாளர் எஸ்.பி. மாரியப்பன்  வேண்டுகோள்…

Next Post

தூத்துக்குடியில் ஒப்பந்தக்காரரை தாக்க முயற்சி 5பேர் மீது வழக்கு

Next Post
தூத்துக்குடியில் ஒப்பந்தக்காரரை தாக்க முயற்சி 5பேர் மீது வழக்கு

தூத்துக்குடியில் ஒப்பந்தக்காரரை தாக்க முயற்சி 5பேர் மீது வழக்கு

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In