• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடி எஸ்பி அலுவலகத்தில் பொங்கல் பண்டிகை உற்சாகம்:  தமிழர்களின் பாரம்பரிய உடையான வேஷ்டி சட்டை அணிந்து, ரேக்ளா ரேஸ் வண்டியில் வந்து அசத்திய எஸ்பி ஆல்பர்ட் ஜான்!!!

policeseithitv by policeseithitv
January 15, 2025
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடி எஸ்பி அலுவலகத்தில் பொங்கல் பண்டிகை உற்சாகம்:   தமிழர்களின் பாரம்பரிய உடையான வேஷ்டி சட்டை அணிந்து, ரேக்ளா ரேஸ் வண்டியில் வந்து அசத்திய எஸ்பி ஆல்பர்ட் ஜான்!!!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

 

தூத்துக்குடியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேஷ்டி சட்டை அணிந்து, ரேக்ளா ரேஸ் வண்டியில் வந்து பொதுமக்கள் மற்றும் காவலர்கள் இணைந்து பல்வேறு விளையாட்டுகளை நடத்தி பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடினர்.

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை உற்சாகமாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் கொண்டாடப்பட்டது. இதனைத்தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தலைமையில் தூத்துக்குடியில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது.

இதற்காக, தமிழர்களின் பாரம்பரிய உடையான வேஷ்டி சட்டையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் வருகை தந்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் இருந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு ரேக்ளா ரேஸ் மாட்டு வண்டியில் ஏறி உற்சாகமாக வந்தார். அப்போது அங்கிருந்த பெண் காவலர்கள் மலர் தூவியும் மாணவர்கள் சிலம்பாட்டம் சுற்றி உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.

இதையடுத்து, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புத்தாடை அணிந்து வந்திருந்த காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் காவல்துறையினர் குடும்பத்தினர் மற்றும் மும்மத குருக்கள் சமத்துவ பொங்கல் வைத்து பொங்கல் விழாவை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

தொடர்ந்து நடைபெற்ற காவல்துறையினருக்கான கைப்பந்து, கபடி, காவலர்களின் குழந்தைகளுக்கான பாட்டிலில் நீர் நிரப்பும் போட்டி, கயிறு இழுக்கும் போட்டி மற்றும் கலை நிகழ்ச்சிகள் ஆகியவை சிறப்பாகவும் விறுவிறுப்பாகவும் நடைபெற்றது. இதில் நகர உதவி காவல் கண்காணிப்பாளர் மதன், ஊரகப்பகுதி துணை கண்காணிப்பாளர் சுதிர், ஜாமியா பள்ளிவாசல் தலைமை இமாம் அப்துல் அலிம், பங்குத்தந்தை சந்தியாகு ஆயுதப்படை ஆய்வாளர் சுனை முருகன், தனிப்பிரிவு ஆய்வாளர் உமையொரு பாகம், எஸ்பி தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் ராஜா, பிஆர்ஓ செல்லப்பா, மற்றும் காவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Previous Post

தூத்துக்குடி தெற்கு காவல் நிலையத்தில் பாரம்பரிய உடை அணிந்து, பானையில் அரிசி இட்டு தமிழர் திருநாளாம் பொங்கலை கொண்டாடி போலீஸார் மகிழ்ந்தனர்.

Next Post

தூத்துக்குடியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் சமத்துவ பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.: முன்னாள் மாமன்ற உறுப்பினர் ஆனந்தகுமார்   100 க்கு மேற்பட்ட பெண்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கினார்…

Next Post
தூத்துக்குடியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் சமத்துவ பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.: முன்னாள் மாமன்ற உறுப்பினர் ஆனந்தகுமார்    100 க்கு மேற்பட்ட பெண்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கினார்…

தூத்துக்குடியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் சமத்துவ பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.: முன்னாள் மாமன்ற உறுப்பினர் ஆனந்தகுமார்   100 க்கு மேற்பட்ட பெண்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கினார்...

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In