தூத்துக்குடி
ஜனவரி 1
தூத்துக்குடி பிரஸ் கிளப் சார்பில் 2025 -ம் ஆண்டு ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு தமிழ் சாலையில் உள்ள பிரஸ் கிளப் தலைமை அலுவலகத்தில் வைத்து நள்ளிரவு சரியாக 12 மணி அளவில் பிரஸ் கிளப் தலைவர் AT. சண்முகசுந்தரம், செயலாளர் மோகன்ராஜ், தலைமையில், துணைத் தலைவர் சிதம்பரம், கௌரவ ஆலோசகர் மூத்த பத்திரிகையாளர்
எம். ஆத்திமுத்து
செயற்குழு உறுப்பினர்கள், ராஜ் டிவி
மாரி ராஜா, நியூஸ் தமிழ் முத்துராமன், கண்ணன் ஆகியோர் முன்னிலையில்
தூத்துக்குடி பிரஸ் கிளப் என்ற பெயர் பொறிக்கப்பட்ட கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.


அதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்கள்
ஒருவருக்கொருவர் தங்களது வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். அதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களுக்கு கேக் வழங்கப்பட்டது. பின்னர் பிரஸ் கிளப் அலுவலக வாசலில் வெடி வெடித்து பத்திரிகையாளர்கள் புத்தாண்டை கொண்டாடினர்
இந்த சிறப்புமிக்க நிகழ்ச்சிக்கு லசால் பள்ளி ஆசிரியர் ஜெயக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பத்திரிகையாளர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில்,
நியூஸ் 7 இசக்கி ராஜா, காவலர் வாய்ஸ் சூர்யா மற்றும் செய்தியாளர்கள் பங்கேற்றனர். தூத்துக்குடி பிரஸ் கிளப் சார்பில் நடைபெற்ற இந்த புத்தாண்டு நிகழ்ச்சி வெகு சிறப்பாக அமைந்துள்ளது..

