நெல்லை டவுன் பகுதியில் நேற்று நவீன ரக துப்பாக்கிகளுடன் சிறப்பு அதிரடிப்படையினர் கொடி அணிவகுப்பு நடத்தினர். இந்த அணிவகுப்பில்
துணை கமிஷனர் சீனிவாசன் தலைமையில் போலீசார் ஈடுபட்டனர்.
சட்டமன்ற தேர்தலையொட்டி நெல்லை டவுனில் நவீன ரக துப்பாக்கிகளுடன் சிறப்பு அதிரடிப்படையினர் கொடி அணிவகுப்பு நடத்தினர் சட்டமன்ற தேர்தலில் வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் பாதுகாப்பு பணியில் வந்துள்ள எல்லை பாதுகாப்பு படையினர் அந்த பகுதியில் போலீசாருடன் இணைந்து கொடி அணிவகுப்பு ஈடுபட்டு வருகின்றனர் இதேபோல் நெல்லை டவுனில் கொடி அணிவகுப்பு நடந்தது இதில் எல்லை பாதுகாப்பு படையினர் போலீசாருடன் தமிழ்நாடு சிறப்பு காவல் படையினரும் பங்கேற்றனர்
குடி அணிவகுப்பில் அதிநவீன கண்ணீர்புகை குண்டு வீசக்கூடிய ஆயுதங்கள் பாதுகாப்பு கவசங்கள் உடன் சிறப்பு அதிரடிப்படையினர் கலந்துகொண்டு டவுன் நெல்லையப்பர் கோயில் சுவாமி சன்னதி முன்பு இருந்து துவங்கிய அணிவகுப்பு பேரணி வாகையடி முனை லாலா சத்திரம் உக்கு தொண்டர் சன்னதி வழியாக பாறையடி மில் முடிவடைந்தது
மாநகர போலீஸ் துணை கமிஷனர் சீனிவாசன் தலைமை வகித்தார். பின்னர் அவர் அப்பகுதி பொதுமக்கள் இடம் பேசுகையில் பொதுமக்கள் எந்தவித பயமும் அச்சமும் இன்றி தேர்தலில் வாக்களிக்கலாம் 100% வாக்களித்து தங்களது ஜனநாயக கடமைகளை பொதுமக்கள் ஆற்றவேண்டும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரவுடிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர் என்றார். டவுன் உதவி கமிஷனர் சதீஷ்குமார் மாநகர ஆயுதப்படை உதவி கமிஷனர் உத்தரவு டவுன் காவல் ஆய்வாளர் ராமேஸ்வரி நுண்ணறிவு பிரிவு தானு சப்-இன்ஸ்பெக்டர்கள் விமலன் ஜெகன் மற்றும் டவுன் காவல் நிலைய காவலர்களும் கலந்துகொண்டனர்.


செய்தி தொகுப்பு:
போலீஸ் செய்தி. காம் சிறப்பு செய்தியாளர் நெல்லைகொம்பன் ராஜ்.

