சென்னையில் பல்வேறு இடங்களுக்கு ஆட்டோவில் சென்று செல்போன் திருடிய தண்டையார்பேட்டை பகுதியைச் சேர்ந்த அருண்குமார் மற்றும் 4 நபர்களை கைது செய்து , 6 செல்போன்கள் மற்றும் 1 ஆட்டோ கைப்பற்றுதல் செய்த திருவல்லிக்கேணி காவல்துறையினருக்கு சென்னை பெருநகர போலீஸ் கமிஷ்னர் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.
கும்பகோணம் , நீலத்தநல்லூர் பகுதியைச் சேர்ந்த சரவணன் வ / 34 என்பவர் 18.03.2021 அன்று சென்னை பெல்ஸ் ரோடு ஒயின்ஷாப்பில் மதுபானம் வாங்கிக்கொண்டு திரும்பியபோது , அங்கு நின்று கொண்டிருந்த ஒருவர் சரவணனிடம் செல்போனை பறித்துக்கொண்டு தப்பி ஓடிய போது அங்கு ரோந்து பணியிலிருந்த திருவல்லிக்கேணி காவல் நிலைய குற்றப்பிரிவு முதல் நிலைக்காவலர் கண்ணன் இரண்டாம் நிலைக்காவலர் பரத் ஆகிய இருவரும் விரைந்து செயல்பட்டு செல்போனை பறித்துக்கொண்டு தப்பி ஓடிய குற்றவாளி அருண்குமார் M/ 23, தண்டையார்பேட்டை என்பவரை மடக்கிப்பிடித்து திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.. விசாரணையில் குற்றவாளி அருண்குமார் அளித்த தகவலின் பேரில் , முதல் நிலைக்காவலர்கள் சிவகுமார் , மணிமுத்து ,ராம்குமார் ஆகியோர் மேற்படி சம்பவத்தில் தொடர்புடைய மற்ற குற்றவாளிகளான வடிவேல் , வ / 30 , பழைய வண்ணாரப்பேட்டை 2,) வினித்குமார் M/ 22 , பழைய வண்ணாரப்பேட்டை 3.) தயாளன் வ / 29 , பழைய வண்ணாரப்பேட்டை , 4.) விஜய் , வ / 23 , கொருக்குப்பேட்டை ஆகிய நான்கு நபர்களையும் கைது செய்து, அவர்களிடமிருந்து 6 செல்போன்கள் மற்றும் 1 ஆட்டோ கைப்பற்றப்பட்டு, அவர்கள் மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
மேற்படி சம்பவங்களில் சிறப்பாக பணிபுரிந்து குற்றவாளிகளை கைது செய்த காவல் காவல் குழுவினரை, சென்னை பெருநகர போலீஸ் கமிஷ்னர் மகேஷ்குமார் அகர்வால் இன்று நேரில் அழைத்துப் பாராட்டி வெகுமதி மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார்.




