தூத்துக்குடி மாவட்டத்தில் போக்ஸோ வழக்குகளில் ஈடுபட்ட எதிரிகள் 2 பேர் இன்று ஒரே நாளில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது – மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் நடவடிக்கை.
கடந்த 31.01.2021 அன்று தூத்துக்குடி CSI பள்ளி காம்பவுண்ட் பகுதியை சேர்ந்த லெஸ்லின் மகன் ரமேஷ் (42) என்பவர் ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியை சேர்ந்த 10 வயது சிறுமியிடம் பாலியல் துன்பறுத்தலில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில் ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து ரமேஷை கைது செய்தனர். மேற்படி இவ்வழக்கின் எதிரியான ரமேஷ் என்பவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. லெட்சுமி பிரபா அவர்களும்,
கடந்த 29.01.2021 அன்று திருச்செந்தூர் இடைச்சி விளை காமராஜர் நகர் பகுதியை சேர்ந்த அய்யாதுரை மகன் வேலாண்டி (48) என்பவர் திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட 8 வயது சிறுமியை பாலியல் வன்முறை செய்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில் திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து வேலாண்டியை கைது செய்தனர். மேற்படி இவ்வழக்கின் எதிரியான வேலாண்டி என்பவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. பிரேமா அவர்களும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு அறிக்கை தாக்கல் செய்தனர்.
மேற்படி காவல் ஆய்வாளர்களின் அறிக்கையின் அடிப்படையில் 2 எதிரிகளையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ள தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு பரிந்துரை செய்தார்.
அதன் பேரில் மாவட்ட ஆட்சியர் திரு. கி. செந்தில் ராஜ் இ.ஆ.ப அவர்கள் மேற்படி எதிரிகளான 1) தூத்துக்குடி CSI பள்ளி காம்பவுண்ட் பகுதியை சேர்ந்த லெஸ்லின் மகன் ரமேஷ் 2) திருச்செந்தூர் இடைச்சி விளை காமராஜர் நகர் பகுதியை சேர்ந்த அய்யாதுரை மகன் வேலாண்டி ஆகிய 2 எதிரிகளையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் சம்மந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர்கள் 2 எதிரிகளையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை சிறையிலடைத்தனர்.

