• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

சாயர்புரம் காவல் உதவி ஆய்வாளர் மீது தூத்துக்குடி எஸ்.பி.யிடம் இளைஞர் பரபரப்பு புகார்

policeseithitv by policeseithitv
September 25, 2024
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடி கடல் வழியாக கடத்தப்படும்   போதை பொருட்கள் நடமாட்டம் முற்றிலுமாக தடுக்க அதிரடி நடவடிக்கை : புதிய எஸ்பி ஆல்பர்ட் ஜான் உறுதி!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி.ஆல்பர்ட் ஜான் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தூத்துக்குடி தாலுகா, சேர்வைக்காரன்மடம் காமராஜ் நகர் பகுதியைச் சார்ந்த பாஸ்கர் மகன் சத்தியதாஸ் என்ற கதிர் என்பவர் சாயர்புரம் காவல்நிலைய உதவி ஆய்வாளராக பணியாற்றி வரும் அந்தோணிராஜ் மீது பரபரப்பு புகார் அளித்தார்.
அந்த புகார் மனுவில் அவர் தெரிவித்துள்ளதாவது: நான் மேற்கண்ட முகவரியில் குடும்பத்தோடு வசித்து வருகிறேன். நான் கடந்த 24.07.2024 அன்று சாயர்புரத்தில் உதவி ஆய்வாளராக வேலை பார்த்த சூசை அந்தோணிராஜ் என்பவர் மீது புகார் மனு கொடுத்திருந்தேன். அந்த புகார் மனு சார்பாக இதுவரை எந்தவொரு விசாரணையும் நடைபெறவில்லை. அவர் தொடர்ந்து எனது முன்னாள் ஓனர் S.P. மாரியப்பன் என்பவர் மீது தொடர்ந்து பொய் புகார் அளிக்கும்படி தொடர்ந்து வற்புறுத்தி வருகின்றனர். அதற்கு நான் மறுப்பு தெரிவிப்பதால் அவரும் அவருடன் பணிபுரிகின்ற சக ஊழியரான ஜெயகோபால் என்பவரும் தொடர்ந்து மிரட்டி வருகின்றனர். சூசை அந்தோணிராஜ் என்பவர் மாரியப்பன் என்பவரிடம் வாடகைக்கு வீடு பார்த்து தருமாறும் அதை யாரிடமும் சொல்லக்கூடாது எனவும் அடிக்கடி மாமூல் கேட்டும் பிரச்சனை பண்ணி வந்ததால் ஏற்கனவே மாரியப்பன் மீது முன்விரோதத்தில் இருந்துள்ளார்.


இதன் காரணமாக மாரியப்பன் என்பவரிடம் டிரைவராக பணிபுரிந்த என்னை வைத்து மாரியப்பன் என்பவர் மீது பொய் புகாரளித்து அவரை கைது செய்ய வேண்டும் என ஆக்ரோஷத்தில் இருக்கிறார். இதற்கு உடந்தையாக சகாயராஜ் என்பவர் உதவி ஆய்வாளருக்கு உடந்தையாக இருக்கிறார். எனவே எனது மனுவினை விசாரித்து என் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் மேலே கண்ட மூவர் மீதும் தக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என அந்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாயர்புரம் காவல் உதவி ஆய்வாளர் மீது இளைஞர் ஒருவர் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் நேரில் புகார் அளித்துள்ள சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Photo

Previous Post

கொடுத்த வாக்குறுதியை 60 வார்டு பகுதியிலும் நிறைவேற்றுவேன் தெற்கு மண்டலத்தில் நடைபெற்ற குறைதீா்க்கும் முகாமில் மேயர் ஜெகன் பொியசாமி பெருமிதம்

Next Post

வெங்கடேஷ் பண்ணையாரின் 21-வது நினைவு தினம்: பெருந்தலைவர்  மக்கள் கட்சி நிறுவனர்  என்.ஆர். தனபாலன் தலைமையில் நிர்வாகிகள் அஞ்சலி!!

Next Post
வெங்கடேஷ் பண்ணையாரின் 21-வது நினைவு தினம்:     பெருந்தலைவர்   மக்கள் கட்சி நிறுவனர்   என்.ஆர். தனபாலன் தலைமையில் நிர்வாகிகள் அஞ்சலி!!

வெங்கடேஷ் பண்ணையாரின் 21-வது நினைவு தினம்: பெருந்தலைவர்  மக்கள் கட்சி நிறுவனர்  என்.ஆர். தனபாலன் தலைமையில் நிர்வாகிகள் அஞ்சலி!!

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In