சென்னை பெருநகர போலீஸ் கமிஷ்னர் மகேஷ்குமார் அகர்வால் வரும் சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிகள் குறித்து ஐஸ்ஹவுஸ் இராயப்பேட்டை பகுதிகளில் உள்ள அதிக எண்ணிக்கையுள்ள வாக்குசாவடி வளாகங்களை கூடுதல் கமிஷ்னர் (தெற்கு )கண்ணன் இணை கமிஷ்னர் கிழக்கு மண்டலம் உடன் சரக அதிகாரிகளுடன் இன்று பார்வையிட்டு தகுந்த அறிவுரைகளை அதிகாரிகளுக்கு வழங்கினார்.மேலும் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பராமரிக்கப்படும் பாதுகாக்கப்பட்ட இடங்கள்.வாக்கு எண்ணும் வளாக பாதுகாப்பு அமைப்புகளை நேரில் அதிகாரிகளுடன் பார்வையிட்டு ஆய்வு செய்துவருகிறார்.




