சேவை குறைபாடு காரணமாக சுப்பிரமணியன் என்பவர் நிலத்தை அளந்து காட்ட முதியவரிடம் ரூ.4000 கட்டணம் பெற்றுக்கொண்டு வட்டாட்சியர் அதற்கான சேவை வழங்காமல் காலதாமதம் செய்ததால் முதியவருக்கு ஏற்பட்ட மனஉளைச்சலுக்கு நஷ்டஈடாக ரூ.25,000-மும் மற்றும் வழக்கு செலவு தொகையாக ரூ.10,000மும் சேர்த்து தூத்துக்குடி வட்டாட்சியர் வழங்க தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு பிறப்பித்தது.

தூத்துக்குடி, மில்லர்புரத்தைச் சார்ந்த சக்திவேல் என்பவரின் மகன் சுப்பிரமணியன் என்பவர் மீளவிட்டான் கிராமத்தில் உள்ள தனது நிலத்தை அளந்து காண்பித்து எல்கை மால் குறித்து தர வேண்டி தூத்துக்குடி வட்டாட்சியர் மனு வழங்கியிருந்தார். தனது நிலத்தை அளந்து காட்ட வேண்டியதற்கு கட்டணமாக ரூபாய் 4,000-ஐ கட்டணமாக செலுத்தியுள்ளார்.
சுப்பிரமணியன் நிலத்தை அளந்து காட்ட வேண்டியதற்கு ரூ.4000 கட்டணம் செலுத்தியதை வட்டாட்சியர் அலுவலகத்தில் பெற்றுக்கொண்டு அதற்கான சேவையை வழங்காமல் காலதாமதம் செய்து வந்துள்ளனர். எனவே சுப்பிரமணியன் தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தை நாடியுள்ளார். பாதிக்கப்பட்ட சுப்பிரமணியன் சார்பாக வழக்கறிஞர் ஜெயச்சந்திரன் ஆஜராகியுள்ளார்.
வழக்கை விசாரித்த தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் திருநீல பிரசாத், உறுப்பினர்கள் ஆ.சங்கர், நமச்சிவாயம் ஆகியோர் தூத்துக்குடி வட்டாட்சியரின் சேவை குறைபாட்டினை சுட்டிக் காட்டி பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு சேவை குறைபாட்டினை ஏற்படுத்திய காரணத்தினால், அவருக்கு ஏற்பட்ட மனஉளைச்சலுக்கு நஷ்டஈடாக ரூ.25,0000- மும், மற்றும் வழக்கு செலவு தொகையாக ரூ.10000-மும், மேலும், இந்த உத்தரவு வழங்கப்பட்ட நாளிலிருந்து 2 மாத காலத்திற்குள் புகார்தார் சுப்பிரமணியனுக்கு செலுத்த வேண்டும். தவறும்பட்சத்தில் வழக்கு செலவுதொகை தவிர்த்து நஷ்டஈடு தொகைக்கு புகார்மனு கோப்பிற்கு எடுத்துக் கொண்ட தேதி 08.05.2024-யிலிருந்து அந்த தொகையை செலுத்தும் தேதி வரை ஆண்டொண்றுக்கு 9 சதவீதம் வட்டியுடன் எதிர்தரப்பினரான வட்டாட்சியர் புகார்தாரரான சுப்பிரமணியனுக்கு செலுத்த வேண்டுமென்று உத்தரவு பிறப்பித்தனர்.

