தூத்துக்குடி
பெரியசாமி கல்வி அறக்கட்டளை மற்றும் ஹிந்துஸ்தான் கொககோலோ நிறுவனம் இணைந்து ஒருங்கிணைத்த மகளிர்கான இலவச தையல் பயிற்சியை தூத்துக்குடி – முத்தையாபுரம் பகுதியில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் துவக்கி வைத்து பேசுகையில்
இந்த இலவச பயிற்சியின் மூலம் எல்லோரும் நன்மையடைய வேண்டும் என்ற அடிப்படையில் தொடங்கப்பட்டு இந்த மாவட்டத்தில் உள்ள பெண்களுக்கு வழங்கப்படுகிறது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் பெண்களுக்கென்று ஏராளமான திட்டங்களும் நன்மைகளும் கிடைக்கப் பெற்றுள்ளன. குறிப்பாக இலவச பேருந்து பயணம் மகளிர் உாிமைத் தொகை மாணவிகளுக்கு கல்லூாி உதவித்தொகை அரசியல் மற்றும் அரசு வேலைவாய்ப்பில் அதிக முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. தையல் பயிற்சி முடித்தவர்களுக்கு அரசின் இலவச தையல் இயந்திரம் பெற்றுகொள்ளும் வாய்ப்பும் கணினி கற்றுகொண்டவர்களுக்கு அரசுத்துறையில் பல்வேறு வாய்ப்புகளும் கிடைக்கப்பெறும் எந்த பணியை செய்தாலும் அதில் முழு ஈடுபாடுடன் கவனம் செலுத்தி முயற்சி மேற்கொண்டு பயிற்சி எடுத்துக்கொண்டால் எல்லா துறைகளிலும் சாதிக்கலாம் பெண்களும் எல்லாத்துறைகளிலும் ஆண்களுக்கு நிகராக பல்வேறு உயர்பதவிகளுக்கும் வரவேண்டும். பல சாதனைகளையும் செய்ய வேண்டும். என்ற தொலைநோக்கு பார்வையோடு தான் இந்த அறக்கட்டளை தொடங்கப்பட்டதின் நோக்கமாகும். போட்டி நிறைந்த உலகத்தில் நமது திறமையின் மூலம் தான் சாதிக்க முடியம் வெற்றி ஒன்றே நமக்கு குறிக்கோள் என்ற என்னத்தோடு பயிற்சி முடித்தவர்கள் பல வகையிலும் வெற்றி பெற வேண்டும். பயிற்சிக்கு வந்துள்ள மாணவிகள் சாதனை படைக்க வேண்டும். என்று எல்லோரையும் கேட்டுக்் கொள்வதுடன் இதில் கலந்து கொண்ட அனைவரையும் மனதார வாழ்த்துகிறேன் என்று பேசினார்.
உடன் ஹிந்துஸ்தான் கொககோலோ நிறுவனம் மேலாளர் பொது விவகாரங்கள் தாம்சன், மாநகர திமுக செயலாளர் ஆனந்த சேகரன், வடக்கு மண்டல தலைவர் வக்கீல் பாலகுருசாமி, பகுதி செயலாளர் மேகநாதன், கவுன்சிலர்கள் விஜயகுமார், ராஜதுரை, பச்சிராஜன், மாவட்ட மருத்துவர் அணி தலைவர் அருண்குமார், மாநகர இளைஞரணி அமைப்பாளர் அருண்சுந்தர், மாவட்ட பிரதிநிதி நாராயணன், நெசவாளர் அணி துைண அமைப்பாளர் குமரன், வட்ட செயலாளர் மனோகரன், வட்டப்பிரதிநிதி பாஸ்கர், பெருமாள்கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமாா், மற்றும் கருணா, மணி. அல்பட், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

