• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

3 நோபல் உலக சாதனை படைத்த இளைஞரை நேரில் பாராட்டிய தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி

policeseithitv by policeseithitv
July 19, 2024
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
3 நோபல் உலக சாதனை படைத்த இளைஞரை நேரில் பாராட்டிய தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

 

தூத்துக்குடி.

தூத்துக்குடி அருகே பொட்டல்காடு கிராமத்தை சேர்ந்த 19 வயது இளைஞர் எம்.ஆர்யா ஸ்கிப்பிங், தொடர்ச்சியாக நிஞ்சாக் சுழற்றி 3 நோபல் உலக சாதனை படைத்துள்ளார்.

போதை போன்ற தவறான வழிகளில் இளைஞர்கள் போகக்கூடாது, உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில், ஸ்பிக்நகர் கீதா மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் உலக இளைஞர்கள் தின விழா மற்றும் காமராஜரின் 122-வது பிறந்த நாள் விழா நடைபெற்றது. இந்த விழாவுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலர் எஸ்.அந்தோணி அதிஷ்டராஜ் தலைமை வகித்தார்.

இவ்விழாவின் போது, பொட்டல்காடு கிராமத்தை சேர்ந்த 19 வயது இளைஞர் எம்.ஆர்யா, தனது முதுகில் 30.3 கிலோ எடையுள்ள பாரத்தை சுமந்து கொண்டு தொடர்ச்சியாக 3 நிமிடத்திற்கு ஸ்கிப்பிங் விளையாட்டில் ஈடுபட்டு, 366 சுற்றுகளை பெற்று உலக சாதனை படைத்தார். மேலும் இரு கைகளை பயன்படுத்தி தொடர்ச்சியாக ஒரு மணி நேரம் 11 நிமிடம் நிஞ்சாக் சுழற்றியும், அரை மணி நேரம் ஒரு கையை பயன்படுத்தி நிஞ்சாக் சுழற்றி என 3 நோபல் உலக சாதனைகளை நிகழ்வு படைத்துள்ளார். இதன் நடுவர்களாக நோபல் உலக சாதனை நிறுவனத்தின் மாநில தலைமை செயல் அலுவலர் டாக்டர் அரவிந்த் லட்சுமி நாராயணன், தேசிய அமைப்பாளர் எம்.கே.பரத் குமார் ஆகியோர் இருந்தனர்.

இதனை தொடர்ந்து, ஆர்யா உலக சாதனை பெற்றுள்ளதாக, நடுவர்கள் அறிவித்ததுடன், அவருக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினர். இதனையடுத்து, ஆர்யாவுக்கு அவரது பெற்றோர் முத்துசாமி, ரேவதி, ஸ்கிப்பிங் பயிற்சியாளர் ஐயப்பன் மற்றும் மாணவ, மாணவிகள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

இந்நிலையில், தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி 3 நோபல் உலக சாதனைகளை நிகழ்த்திய 19 வயது இளைஞர் எம்.ஆர்யாவை வரவழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.

புரட்சி பாரதம் கட்சி தூத்துக்குடி மத்திய மாவட்டச் செயலாளர் மாரிச்செல்வம், தமிழர் முன்னேற்றக் கழகம் மாநில இளைஞரணிச் செயலாளர் கந்தன் கரிகாலன், பகுஜன் சமாஜ் கட்சி மாவட்ட செயலாளர் மணிகண்டன், இந்திய குடியரசு கட்சி மாவட்ட தலைவர் ரத்தினசாமி, புரட்சி பாரதம் கட்சி மாவட்ட துணைத்தலைவர் அந்தோணி சாமி, வடக்கு மாவட்ட திமுக ஆதிதிராவிடர் நல துணை அமைப்பாளர் பெருமாள், மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், போல்பேட்டை பகுதி பிரதிநிதிகள் ஜோஸ்பர் பிரபாகர் உட்பட பலர் உடனிருந்தனர்.

Previous Post

தூத்துக்குடி வெற்றிவேல்புரம் மாரியம்மன் கோவில் கொடை விழாவையொட்டி அன்னதானத்தை அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்.

Next Post

தூத்துக்குடி வடக்கு மண்டல அலுவலகத்தில் பொதுமக்கள் அளித்த 325 மனுக்களில் 110 மனுக்களுக்கு உடனடி தீர்வு – அமைச்சர் கீதாஜீவன் தகவல்.

Next Post
70 வருடம் அரசியலில் தமிழ்நாட்டிற்கு கலைஞர் ஓரு வரம் என்று சொன்ன சீமான் தற்போது மாத்தி பேசுகிறார். தூத்துக்குடியில் அமைச்சர் கீதாஜீவன் கடும் தாக்கு

தூத்துக்குடி வடக்கு மண்டல அலுவலகத்தில் பொதுமக்கள் அளித்த 325 மனுக்களில் 110 மனுக்களுக்கு உடனடி தீர்வு - அமைச்சர் கீதாஜீவன் தகவல்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In