தூத்துக்குடி
தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் உள்ள 8 அங்கன்வாடி மைய குழந்தைகளுக்கு தேவையான உபகரணங்களை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்.
தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட எம்ஜிஆர் நகர், முத்துநகர், காதர்மீரான்நகர், மீனவர்காலனி, தங்கம்மாள்புரம், பாரதிநகர், ஜெ.எஸ்.நகர், அத்திமரப்பட்டி ஆகிய 8 இடங்களில் உள்ள குழந்தைகள் வளர்ச்சித்திட்டத்தின் கீழ் செயல்படும் அங்கன்வாடியில் பயிலும் குழந்தைகளுக்கு எஸ்.இ.பி.சி. பவர் பி லிமிடெட் சார்பில் ரூ.2,92,160 மதிப்பில் அமர்ந்திருந்து எழுதுவதற்கு தேவையான 176 மேசைகளை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார். மேலும் குழந்தைகளுக்கு அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி, நன்றாக படிக்க வேண்டும் என்று அமைச்சர் கீதாஜீவன் அறிவுரை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், குழந்தைகள் வளர்ச்சித்திட்ட நகர்புற அலுவலர் ரூபி பெர்ணான்டோ, மாநகர திமுக செயலாளர் ஆனந்த சேகரன், எஸ்.இ.பி.சி. பவர் பி லிமிடெட் தலைமை அதிகாரி நரேந்திரா, மேலாளர்கள் ஜெயக்குமார் ராஜு, முருகேசன், மேலாளர் (சிவில்) அருள், மாநகராட்சி தெற்கு மண்டல தலைவர் வக்கீல் பாலகுருசாமி, பகுதி செயலாளர் மேகநாதன், துணை செயலாளர் தீபக், மாவட்ட மருத்துவரணி தலைவர் அருண்குமார், மாநகர இளைஞரணி அமைப்பாளர் அருண்சுந்தர், மாநகர இலக்கிய அணி துணை அமைப்பாளர் பால்ராஜ், நெசவாளர் அணி துணை அமைப்பாளர் குமரன், கவுன்சிலர்கள் வைதேகி, விஜயகுமார், ராஜதுரை, பட்சிராஜ், சுயம்பு, மாவட்ட பிரதிநிதி சுரேஷ், வட்ட செயலாளர்கள் அனல் சக்திவேல், செல்வராஜ், நடேசன் டேனியல், பிரசாந்த், வட்ட அவைத்தலைவர் பெரியசாமி, துணைச் செயலாளர் மரியதாஸ், பொருளாளர் வெங்கடாசலம், வட்ட பிரதிநிதி பாஸ்கர் மற்றும் மணி, தங்கம்மாள் மாரிமுத்து, அல்பட் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

