தூத்துக்குடி
கோடைவெயில் வாட்டி வதைக்கும் இந்த நேரத்தில் தமிழகம் முழுவதும் பொதுமக்களின் தாகத்தை தீர்க்கும் வகையில் நீர் மோர் பந்தல்கள் அமைக்க வேண்டும் என்று திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், மாநில இளைஞர் அணி செயலாளரும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதிஸ்டாலின் ஆகியோர் உத்தரவிட்டிருந்தனர்.
அதன்படி தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் மாதாகோவில் அருகில் அமைக்கப்பட்டிருந்த நீர் மோர் பந்தல் திறப்புக்கு மாநில மீனவரணி துைண செயலாளர் துறைமுகம் புளோரன்ஸ், சிதம்பரநகர் 36வது வட்ட திமுக செயலாளர் செல்வராஜ், பிரையண்ட்நகா் 44வது வட்ட திமுக செயலாளர் சுப்பையா, திரேஸ்புரம் மாநகராட்சி மண்டலத்தலைவர் நிர்மல்ராஜ், ஆகியோர் ஏற்பாடு செய்திருந்து 4 இடங்களில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன், மேயர் ஜெகன் பொியசாமி திறந்து வைத்து மோர், சர்பத், கரும்புசாா், நுங்கு, இளநீர், எலுமிச்சை ஜூஸ், ரஸ்னா, உள்ளிட்ட குளிர்பானங்கள், மற்றும் தர்பூசணி பழம், வாழைப்பழம், செவ்வாழை, அண்ணாசிபழம், பலாப்பழம், போன்ற பழவகைகளையும் பொதுமக்களுக்கு வழங்கினார்.
பின்னர் கூறுகையில் தண்ணீர் பந்தல் திறப்பது பொிய விஷயம் அல்ல கோடை காலம் முடியும் வரை பொதுமக்களின் நலன் கருதி குளிர்ந்த நீர் குளிர்பானங்கள் வழங்கி தினசாி அதை முறையாக பராமாிக்க வேண்டும் கடமைக்கு பணியாற்றாமல் கடமை உணா்வோடு பணியாற்ற வேண்டும். என்று கேட்டுக்கொண்டார்.
நிகழ்ச்சியில் மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், மாவட்ட மீனவரணி அமைப்பாளர் அந்தோணிஸ்டாலின், தொண்டரணி அமைப்பாளர் ரமேஷ், மாவட்ட அணி துணை அமைப்பாளர்கள் அரிகிருஷ்ண கோபால், பிரபு, சேசையா, பெனில்டஸ், மாவட்ட பிரதிநிதி நாராயணன், கவுன்சிலர்கள் விஜயலட்சுமி, சரவணக்குமார், வைதேகி, ராஜேந்திரன், ரெக்ஸின், மாநகர இளைஞர் அணி அமைப்பாளர் அருண்சுந்தா், தொழிலாளா் அணி அமைப்பாளா் முருகஇசக்கி, மாநகர அணி துணை அமைப்பாளர்கள் பிக் அப் தனபால், மகேஸ்வரன்சிங், வக்கீல் ரூபராஜா, தமிழ்வானன், ராஜேந்திரன், நேவிஸ், குமரன், வட்டச்செயலாளர்கள் டென்சிங், கருப்பசாமி, சிங்கராஜ், லியோ ஜான்சன், தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் சுரேஷ்குமாா், பகுதிஇளஞைர் அணி அமைப்பாளா் எமல்டன், பெருமாள்கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், பகுதி செயலாளர்கள் ராமகிருஷ்ணன், சிவகுமார், தொழிற்சங்க செயலாளர் மாியதாஸ், பகுதி பிரதிநிதி ெசந்தில்குமாா், வட்டப்பிரதிநிதிகள் பாஸ்கா், துரை, தனிஷ், வேல்ராஜ், ராஜேந்திரன், வெற்றிராஜன், மாவட்ட பொறியாளர் அணி தலைவர்பழனி, முன்னாள் கவுன்சிலர்கள் பாலசுப்பிரமணியன், சங்கரலிங்கம், வட்ட துணைச்செயலாளர் காளியப்பன், மற்றும் மணி, அல்பட், சேக்முகமது, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

