தூத்துக்குடி
தமிழகத்தில் கோடைகாலம் தொடங்கியதை தொடர்ந்து வெயிலின் தாக்கம் அதிகாித்து வருகிறது வரும் நாட்களில் வெயில் தாக்கம் அதிகாிக்கும் என வானிலை ஆய்வு மையம் தொிவித்துள்ளது. எனவே பொதுமக்களுக்கு சுகாதாரமான முறையில் குடிநீர், நீர் மோர், குளிர்பானங்கள் வழங்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின், மாநில இளைஞர் அணி செயலாளரும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், ஆகியோர் அறிவுறுத்தியுள்ளனர்.
அதன்படி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மீனவளம் மீனவர்நலன் மற்றும் கால்நடைபராமாிப்புத்துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்ததையடுத்து தெற்கு மாவட்ட திமுக வர்த்தக அணி சாா்பில் எட்டையாபுரம் சாலை ஹவுசிங் போர்டு பகுதியில் தெற்கு மாவட்ட திமுக வர்த்தக அணி துணைச்செயலாளரும் மாநகராட்சி கணக்கு குழு தலைவருமான ரெங்கசாமி பொதுமக்களுக்கான நீர்மோர் பந்தலை திறந்து வைத்து தொடர்ந்து வழங்கப்பட்டு வரும் நிலையில் கனிமொழி சார்பில் கோடை வெயிலை முன்னிட்டு பொதுமக்களுக்கு குடைகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் மாநில பேச்சாளர் சரத்பாலா, திமுக வட்டசெயலாளர் தெய்வேந்திரன், ேபால்பேட்டை பகுதி பிரதிநிதி பிரபாகர், மற்றும் வேல்முருகன், ஜவஹர், செல்லையா, பாலசுப்பிரமணியன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

