கோவை,மே,4
போலீசார் குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக கூறி, பிரபல யூடியூபர் சவுக்கு சங்கரை கோவை போலீசார் கைது செய்தனர்.
சமீப காலமாக சமூக வலை தளங்களில் தமிழக அரசு குறித்து கடுமையாக விமர்சித்து வந்தார் சவுக்கு சங்கர். முதல்வர் ஸ்டாலின், அவரது மருமகன் சபரீசன், அமைச்சர் உதயநிதி ஆகியோர் தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகளை சவுக்கு சங்கர் கூறி வந்தார். சமீபத்தில் போலீஸ் அதிகாரிகள் மற்றும் பெண் போலீசார் குறித்தும் அவதூறு கருத்துக்களை பதிவிட்டதாக புகார் எழுந்தது. இதனை தொடர்ந்து சவுக்கு சங்கரை கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் தேனியில் கைது செய்தனர்

கடந்தாண்டு தமிழக அமைச்சர்கள் தொடர்பாக சவுக்கு சங்கர் வெளியிட்ட ஆடியோ பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.
குறிப்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரத்தில்
முழுமையாக தொடர்ந்து பல்வேறு வீடியோக்கள் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. தேனியில் கைது செய்யப்பட்ட பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் விசாரணைக்காக கோவைக்கு அழைத்து செல்லப்படும் போது அவர் சென்ற போலீஸ் வாகனம் விபத்துக்குள்ளாகிறது இதனால் சவுக்கு சங்கருக்கு காயம் ஏற்பட்டு
மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் பத்திரிகை துறையினர் மத்தியிலும் பல்வேறு சமூக
அமைப்பினர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

