தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி ஊராட்சிக்கு உட்பட்ட எம். சவேரியார்புரம் பிரதான சாலை, தாளமுத்து நகர் ஆர்.சி ஆலய எதிரில் ஆகிய 2 இடங்களில் நீர், மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. திமுக கிழக்கு ஒன்றியம் சார்பில்
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அறிவுரையின் பேரிலும், இளைஞர் நலன் விளையாட்டுத்துறை அமைச்சரும், திமுக மாநில இளைஞரணி செயலாளருமான அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உத்தரவின் பேரில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தலின்படி
திமுக கிழக்கு ஒன்றிய செயலாளரும் ஊராட்சி மன்ற தலைவருமான சரவணகுமார்
கோடைகால வெயிலின் தாக்கத்தை குறைப்பதற்காக நீர்,மோர் பந்தலை திறந்து வைத்தார்.


விழாவில் ஆர்சி ஆலய உதவி பங்குத்தந்தை அமல்ராஜ் முன்னிலை வகித்தார் நீர் மோர் பந்தலை ரிப்பன் வேட்டி திறந்து வைத்த பஞ்சாயத்து தலைவர் சரவணகுமார் அப்பகுதியில் உள்ள பொது மக்களுக்கு பழரசம், தர்ப்பூசணி, மோர் போன்றவற்றை வெயிலின் தாக்கத்தை குறைக்கும் வகையில் அனைவருக்கும் வழங்கினார். இந்த
நிகழ்வில் மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் ரவி என்ற பொன் பாண்டி, அவை தலைவர் ஜோசியர் முருகன், ஒன்றிய துணைச் செயலாளர் எஸ் ஆர் கணேசன், ஒன்றிய கவுன்சிலர் அந்தோணி தனுஷ்பாலன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா, சேசு ராஜா, சக்திவேல், வசந்தகுமாரி, கிளைக் கழக செயலாளர் முருகன், வேல்ராஜ், சந்திரசேகர், ஜோதிபாசு நகர் கிளைச் செயலாளர் வேல்ராஜ், மகளிர் அணி சண்முகத்தாய், மாரியப்பன், திமுக இளைஞரணி கௌதம், செல்வகுமார் உட்பட திமுக நிர்வாகிகள் மகளிர் அணியினர் பலர் கலந்து கொண்டனர்.

