தூத்துக்குடி, ஏப்ரல்,19
தூத்துக்குடி மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப் பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வமுடன் வாக்களித்தனர்.
அதுபோல்
தூத்துக்குடி
கீதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் திமுக வடக்கு மாவட்ட செயலாளர் – சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் இன்று காலையில் வாக்கு செலுத்தி தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்.
அவருடன் கணவர் ஜீவன் ஜேக்கப். மகன் மகிழ் ஜான் மற்றும் குடும்பத்தினர்கள் வாக்கை பதிவு செய்தனர். இதுபோல் தங்கம்மாள் மேல்நிலைப் பள்ளியில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, தனது மகன் அஜித் பெரிசன் உடன் சென்று தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார். அதுபோல் தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து தலைவரும் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளருமான சரவணகுமார்
தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் நாடார் நடுநிலைப் பள்ளியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.




மேலும்
நாம் இந்தியர் கட்சி நிறுவனர் என்.பி. ராஜா தங்கம்மாள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார். திருச்செந்தூர் லெட்சுமிபுரம் TDTA நடுநிலைப்பள்ளியில் மாநில திமுக இளைஞரணி துணைச் செயலாளர் தூத்துக்குடி எஸ். ஜோயல் தனது ஜனநாயக கடமையை பொதுமக்களுடன் வரிசையில் காத்திருந்து செலுத்தினார்.
கடம்பூர் சிதம்பராபுரத்தில் இந்து துவக்கப் பள்ளியில் முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் செ.ராஜ் வாக்களித்தார்.
மேலும் அதிமுக கூட்டணி கட்சியான பெருந்தலைவர் மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் எஸ் மாரியப்பன் தனது குடும்பத்துடன் சென்று மறவன் மடம் பகுதியில் உள்ள நடுநிலைப்பள்ளியில் தனது வாக்கினை பதிவு செய்தார். தமாக வேட்பாளர் எஸ் டி ஆர் விஜய சீலன் தூத்துக்குடி
சி .வ அரசு பள்ளியில் தங்கள் குடும்பத்தினருடன் வந்து தனது வாக்கு பதிவு செய்தார். தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் முக்கிய பிரமுகர்கள்
என பலரும் தங்களது ஜனநாயக கடமை நிறைவேற்றினர்.

