தூத்துக்குடி ஏப்ரல்,18.
தூத்துக்குடி சேர்வைகாரன் மடம் தெற்கு தெரு காமராஜர் நகரைச் சார்ந்தவர் மாரியப்பன்
இவர் தனது மகளை வடநாட்டு இளைஞர் ஒருவர் கடத்தி சென்றிருப்பதாக சாயர்புரம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். அந்தப் புகார் மனுவில் அவர் தெரிவித்துள்ளதாவது.
தூத்துக்குடி
சேர்வைகாரன் மடம் காமராஜர் பகுதியில் தனியார்
பாலிபேக் கம்பெனி இயங்கி வருவதாகவும் அங்கு தனது மகள் ராணி (18) பெயர் மாற்றப்பட்டுள்ளது வேலை பார்த்து வருவதாகவும் நேற்று காலை வழக்கம் போல் 10 மணிக்கு வேலைக்கு சென்றவர் இரவு வீடு திரும்பவில்லை என்றும் பல இடங்களில் தேடியும், தங்களது உறவினர்கள் விட்டுக்கு சென்று பார்த்தும்
தனது மகள் எங்கும் கிடைக்கவில்லை என்றும் இதுகுறித்து தனது மகள் பணியாற்றும்
பாலிபேக் கம்பெனியில் விசாரித்த போது
இந்த கம்பெனியில் பணியாற்றும் வடமாநிலத்தைச் சார்ந்த உர்திப் என்ற இளைஞர் உங்களது மகளிடம் அடிக்கடி பேசிக் கொண்டிருப்பான் என தெரிவித்ததாகவும் ஆகையால் எனது மகளை
வடநாட்டு இளைஞன்தான் கடத்தி சென்று இருப்பதாக சந்தேகப்படுகிறேன் . அந்த வட நாட்டு இளைஞனும் கம்பெனிக்கு வராததால் அவர்தான் கடத்திருப்பார்
என சந்தேகப்படுகிறேன். ஆகையால் எனது மகளை பாதுகாப்பாக மீட்டு தரும்படி
கேட்டுக்கொள்கிறேன் என தனது புகார் மனுவில் தெரிவித்துள்ளார். வடநாட்டு இளைஞர் இளம்பெண்ணை எங்கு கடத்தி சென்றுள்ளார். தனது சொந்த மாநிலத்திற்கு கடத்தி சென்றுள்ளாரா
அல்லது சென்னை போன்ற பெரு நகரங்களுக்கு கடத்தி சென்று விட்டாரா? என்ற பல்வேறு கோணங்களில்
போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு இளம்பெண்ணை தேடி வருகின்றனர். தூத்துக்குடியில் வேலைக்கு சென்ற இளம்பெண் ஒருவரை வடநாட்டு வாலிபர் கடத்தியதாக கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

