தூத்துக்குடி
நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் திமுக வேட்பாளரும் துணைப்பொதுச்செயலாளருமான கனிமொழி போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் முதலமைச்சா் ஸ்டாலின் சாதனைகளையும் கனிமொழி இந்த ெதாகுதியில் செய்த பணிகளையும் திட்டங்கள் செயல்பாடுகள் குறித்து தினமும் காலை மாலை என இரு வேலைகளிலும் குறிப்பிட்ட சில பகுதிகளை தேர்வு செய்து திறந்த ஜீப்பீல் சென்றும் துண்டு பிரசுரங்களை பொதுமக்கள் வியாபாாிகள் பாதசாாிகள் செல்லும் வழியில் உள்ள கோவில், தர்கா, தேவாலயம், உள்ளிட்ட இடங்களில் தீவிரமாக வாக்கு சேகாித்து பல இடங்களில் தேநீர் அருந்தி அவா்களது தொழில் மற்றும் நலம் குறித்து மக்களோடு மக்களாக அமர்ந்து வாக்கு சேகாித்து வரும் நிலையில் இன்று காலை 13வது வார்டுக்குட்பட்ட போல்பேட்டை மேற்கு, உள்ளிட்ட பல்ேவறு பகுதியில் கொட்டும் மழையில் நடந்தே சென்று வாக்கு சேகாித்தார்.
மாநகர செயலாளா் ஆனந்தசேகரன், மாவட்ட மகளிா் அணி அமைப்பாளர் கவிதாதேவி, மாநகர இளைஞர் அணி அமைப்பாளர் அருண்சுந்தர், மாநகர தொண்டரணி துணை அமைப்பாளர் முத்துராமன், கவுன்சிலர் ஜாக்குலின்ஜெயா, மாவட்ட பிரதிநிதி செல்வக்குமாா், வட்டச்செயலாளர் ராஜாமணி, பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், மகளிர் அணி துணை அமைப்பாளர் செல்வி, இந்திரா, பகுதி மகளிர் அணி துைண அமைப்பாளர் ரேவதி, வட்டப்பிரதிநிதி பாஸ்கர், மற்றும் மணி, அல்பட், உள்பட பலர் உடன்சென்றனர்.

