தூத்துக்குடி
நடைபெறவுள்ள நாடாளுமன்ற தோ்தலில் இந்தியா கூட்டணி சார்பில திமுக வேட்பாளராக கனிமொழி போட்டியிடுகிறார். அவர்க்கு இந்தியா கூட்டணியை சார்ந்த தலைவர்கள் நிா்வாகிகள் தீவிரமாக வாக்கு சேகாித்து வருகின்றனர்.
இந்நிலையில் தூத்துக்குடியில் உள்ள ஜாமியா பள்ளிவாசல் அனைத்து உலமாக்கல் நிர்வாகிகளை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் சந்தித்து ரம்ஜான் வாழ்த்துக்களை ெதாிவித்து கலந்துரையாடி பேசுகையில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆட்சியின் போது சிறுபான்மை மக்களுக்கு செய்த நன்மைகள் ஏராளம் உள்ளன. அதையெல்லாம் நீங்கள் மறக்க மாட்டிர்கள் அவரது வழியில் தமிழக முதலைமைச்சா் ஆட்சியில் கலைஞரை போன்று செயல்பட்டு சிறுபான்மை மக்களுக்கு எதிரான சட்டங்களையும் திட்டங்களையும் எதிர்த்து மோடி அரசுக்கு எதிராக இரு அவைகளிலும் திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் எம்.பிக்கள் மூலம் எதிர்ப்பு வாக்குகளை பதிவு செய்தனர். அதிமுக ஆதரவு நிலையில் இருந்து வாக்களித்துவிட்டு இன்று சிறுபான்மை மக்களின் பாதுகாப்பை பேணி பாதுகாப்பது போல் வேஷம் போடுகின்றனர். அதையெல்லாம் நீங்கள் நம்பிவிடாமல் இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு ஓட்டுமொத்தமாக ஆதரவு அளிக்க வேண்டும். எப்போதும் போல் திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் உங்கள் நலனில் அக்கறை கொண்டு செயல்படுவோம். என்று தொிவித்தார். அதற்கு நிா்வாகிகளும் தங்களது ஆதரவுகளை வழங்குவதாக கூறினார்கள்.
அரசு தலைமை ஹாஜி முதுர் ரஹ்மான், இந்திய யூனியன் முஸ்ஸீம் லீக் மாவட்ட தலைவர் மீராசா, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத்தலைவர் சண்முகம், மாநில செயற்குழு உறுப்பினர் ஷாஜஹான், திமுக வடக்கு மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், மாவட்ட துணைச்செயலாளர் ராஜ்மோகன் செல்வின், தமிழக வாழ்வுாிமை கட்சி மாவட்ட செயலாளர் கிதர்பிஸ்மி, மாநில செயற்குழு உறுப்பினர் இப்ராஹீம், நகர தலைவர் அஜீஸ், உள்பட ஜாமியா பள்ளிவாசல் நிா்வாகிகள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

