திருச்சிராப்பள்ளி மாநகரத்தில் பணிபுரியும் போக்குவரத்து ஒழுங்கு பிரிவு காவலர்களுக்கு கோடை கால வெப்பத்தினால் ஏற்படும் உடல் உபாதைகளை தவிர்க்கும் பொருட்டு அனைத்து போக்குவரத்து காவலர்களுக்கும் தினமும் காலை 11.00 மணி மற்றும் மதியம் 16.00 மணிக்கு கோடை காலம் முழுவதும் உடலுக்கு ஊக்கம் அளிக்கும் மோர் மற்றும் குளிர்பானம் வழங்கப்படும் நடைமுறையைத் திருச்சி மாநகர போலீஸ் கமிஷ்னர் லோகநாதன் திருச்சி மாநகர காவல் ஆளிநர்களுக்கு பயனளிக்கும் விதமாக வழங்கினார்கள். இந்நிகழ்வின் போது
குற்றம் மற்றும் போக்குவரத்து துணை கமிஷ்னர் வேதரத்தினம் மற்றும் காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் உடன் கலந்து கொண்டனர்.



