கடந்த காலங்களைப் போலவே இந்த முறையும் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது. இந்தத் தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் கடந்த மார்ச் 7ஆம் தேதி ஒரே மேடையில் அறிமுகப்படுத்தப்பட்டனர். மேலும், இந்தத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருவொற்றியூர் தொகுதியில் களமிறங்குகிறார். இதற்காக திருவொற்றியூரில் உள்ள மண்டல அலுவலகத்தில் இன்று மதியம் அவர் வேட்புமனு தாக்கல் செய்தார்.

