கொச்சினில் நடைபெற்ற விழாவில் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கிக்கு “தேசிய அளவில் 2வது சிறந்த வங்கி விருது” வழங்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி லிமிடெட் தனது நூற்றாண்டு ஆண்டைக் கொண்டாடி வருகிறது. இந்நிலையில் 2019 – 2020 ஆம் ஆண்டிற்கான பழமையான தனியார் துறை பிரிவின் கீழ் “தேசிய அளவில் இரண்டாவது சிறந்த வங்கி” என்று தேர்வு செய்யப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் கொச்சினில் ஹோட்டல் தாஜ் கேட்வேயில் “ஸ்டேட் ஃபோரம் ஆஃப் பேங்கர்ஸ் கிளப் கேரளா” சார்பில் நடைபெற்ற விழாவில் இவ்விருதினை ஃபெடரல் வங்கி நிர்வாக இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஷியாம் சீனிவாசன் வழங்கிட, தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி துணைத் தலைவர் சிதம்பரநாதன் மற்றும் திருவனந்தபுரம் கிளை மேலாளர் பி.ஜெபனந்த் ஜூலியஸ் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
மேலும், தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் திருப்பூரம் கிளை 2019 – 20 ஆம் ஆண்டிற்கான “மாநில அளவில் தனியார் துறை பிரிவின் கீழ் சிறந்த செயல்திறன் மிக்க மூன்றாவது கிளை” விருதையும் பெற்றுள்ளது. இவ்விருதினை திருப்பூரம் கிளையின் தலைவர் ஜார்ஜ் ஜான் பெற்றுக் கொண்டார்.

