தூத்துக்குடி, பிப்.10-
தூத்துக்குடி
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வரும் மே மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் திமுக தலைமையிலான குழு அமைக்கப்பட்டது. இவர்கள் கூட்டணி கட்சி தலைவர்களுடன் அண்ணா அறிவாலயத்தில் தொகுதி குறித்து பேச்சுவார்த்தைகள் தொடங்கி விட்டனர். இந்த நிலையில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பாராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம்
நடத்தி 3 தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் மாப்பிள்ளையூரணியில் ஓட்டப்பிடாரம் தொகுதி பொறுப்பாளர்கள் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளரும் மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவருமான சரவணக்குமார் தலைமையில் மாப்பிள்ளையூரணி, ஆ.சண்முகபுரம், மாதா நகர், கணேசபுரம், பாரதி நகர்,பெரிய செல்வம் நகர், ஆகிய பகுதியில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
தொகுதி பொறுப்பாளர் சண்முகையா எம்.எல்.ஏ அனைத்து கிளைப் பகுதிகளிலும் ஆலோசனை கூட்டம் நடத்தி வருகிறார். இதுபோல நேற்று நடைபெற்ற கூட்டத்தில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் தலைமை செயற்குழு பூத் கமிட்டி பாக முகவர்களுடன் கலந்து பேசுகையில் மற்ற தொகுதியை காட்டிலும் நமது ஓட்டப்பிடாரம் தொகுதியில் கூடுதலான வாக்கு வித்தியாசத்தில் கனிமொழி எம்.பியை வெற்றி பெற செய்வதற்கு இரவு பகல் பாராமல் முழுமையாக தங்களை ஈடுபடுத்திக்கொண்டு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், வழிகாட்டுதலின்படி அனைவரும் ஒற்றுமையாக பணியாற்றி தமிழகம் புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
ஆலோசனை கூட்டத்தில் ஓட்டப்பிடாரம் சட்ட மன்ற தொகுதி பொறுப்பாளர்கள் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் மாடசாமி, செந்தூர்மணி, கருங்குளம் யூனியன் சேர்மன் ராஜேந்திரன், வக்கீல் பூங்குமார், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் வீரபாகு, ஒன்றிய கவுன்சிலர் நவநீதகிருஷ்ணன், மற்றும் தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய திமுகவிற்குட்பட்ட தெற்கு மாவட்ட திமுக சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் ரவி என்ற பொன்பாண்டி, மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர் ஆரோக்கியமேரி, ஒன்றிய துணைச்செயலாளர்கள் கணேசன், ராமசந்திரன், வசந்தகுமாரி, பொருளாளர் மாரியப்பன்,மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் ஸ்டாலின், தொண்டரணி துணை அமைப்பாளர் கண்ணன், சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் ஜீவா, மாவட்ட பிரதிநிதிகள் சிவக்குமார், தர்மலிங்கம், சப்பாணிமுத்து, ஊராட்சி மன்ற கிளைச்செயலாளர்கள் காமராஜ், பொன்னுச்சாமி, முருகன், ஆனந்தகுமார், வேல்ராஜ். வடிவேல், ரத்தினகுமார், சேகர், அருள்ஜெகன், பிரபாகர், சரவணன், உத்திரம், ஜான்சன், மூர்த்தி, காசி, ஆனந்தராஜ், இசக்கிமுத்து என்ற செல்வம், மகாராஜா,காஜாமைதீன், பூசாரி முருகன், சந்திரசேகர், துரை, கதிர்வேல், பாண்டி, ஜெபராஜ், குமார், மாரிமுத்து, ஒன்றிய மகளிர் அணி அமைப்பாளர் ஜெஸிந்தா, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா சக்திவேல், தங்கபாண்டி. ஜேசுராஜா, உமாமகேஸ்வரி, ஒன்றிய வழக்கறிஞர் அணி அமைப்பாளர் சோனாராஜன், ஒன்றிய சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் ராஜேந்திரன், மகளிர் அணி ரம்பை, சண்முகத்தாய், மல்லிகா, ஜெயின்னம்பு, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் பிளோமின்
ராஜ், பார்த்தசாரதி, சண்முகத்தாய், முன்னாள் ஒன்றிய துணைச்செயலாளர் மைக்கேல் ராஜ், முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் ஆனந்தகுமார், மற்றும் கௌதம், உள்பட திமுகவினர் பலர் கலந்து கொண்டனர்.

