தூத்துக்குடி மாநகராட்சி 36 வது தனி வார்டு பகுதி சபா கூட்டம் இன்று (01.02.2024 ) நடைபெற்றது. இக்கூட்டத்தில், போல்டன்புரம் சுப்பையாபுரம், மாசிலாமணிபுரம் பகுதி மக்களுக்கான கழிவு நீர் பிரச்சனைகளை குறித்து எடுத்துக் கூறி சரி செய்யுமாறும், மாசிலாமணிபுரம் 3 வது தெருவில் புதிதாக கட்டப்பட்டு விரைவில் திறக்கப்பட உள்ள பூங்காவிற்கு முன்னாள் நகர் மன்ற உறுப்பினரும், உப்பளத் தொழிலாளர்கள், சுமை தூக்கும் தொழிலாளர்களின் பாதுகாவலராக விளங்கியவரும் ஒருங்கிணைந்த நெல்லை தூத்துக்குடி மாவட்ட திமுகவின் வளர்ச்சிக்கு அளப்பரிய கடமையாற்றிய மிசா எஸ். சித்திரைவேல் பெயரை சூட்ட வேண்டும் என்றும், இந்த கோரிக்கையை தீர்மானத்தில் ஏற்ற வேண்டும் என இந்திய குடியரசு கட்சியின் தூத்துக்குடி மாவட்ட தலைவர் ரத்தினசாமி மற்றும் தமிழ்நாடு பறையர் பாதுகாப்பு பேரவை நிறுவன தலைவர் இளவரச பாண்டியன் மற்றும் விழித்தெழு இளைஞர் நல சங்கம் தலைவர் பிரதீப் ஜேசுதாஸ் உள்ளிட்ட பலர் தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் பங்கேற்ற மாநகர் நல அலுவலர் சுமதியிடம் மனு அளித்தனர்.


கோரிக்கை மனுவைப் பெற்றுக் கொண்ட அலுவலர் சுமதி தீர்மானத்தில் ஏற்றுவதாக கூறினார். இதில் 36 வது வார்டு கவுன்சிலர் விஜயலட்சுமி, அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

