தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17, 18 ஆகிய தேதிகளில் பெய்த பெரும் மழையால் மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்டது. அதிலும் குறிப்பாக கோரம்பள்ளம் குளம் உடைப்பு ஏற்பட்டது. கூடுதல் பாதிப்பாக அமைந்தது. கடந்த காலங்களில் பெய்த மழையில் பாதிக்காத பகுதியில் கூட இந்த மழை பாதிப்பை ஏற்படுத்தியது.
தூத்துக்குடி மாநகரில் பல்வேறு பகுதியில் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டதால் அப்பகுதி மக்கள் முகாம்களில் தங்க வைத்து அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ள நிலையில் இயல்பு வாழ்க்கை ஓரளவு திரும்பியுள்ளது. சில பகுதிகளில் திரும்பாத நிலையும் இருந்து வருகிறது.

இந்நிலையில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் சிஜிஇ காலணி, பகுதியில் பொதுமக்களில் போக்குவரத்திற்கு தடையாக தேங்கி நின்ற வெள்ளநீரை அகற்றி உடனடியாக தற்காலிக சாலை அமைத்து கொடுக்க உத்தரவிட்டார்.
ஆய்வின் போது மாநகராட்சி ஆணையர் திணேஷ்குமார், மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், பகுதி செயலாளரும் கவுன்சிலருமான ராமகிருஷ்ணன், வட்டச்செயலாளர் சுரேஷ், ஆணையரின் நேர்முக உதவியாளர் துரைமணி, மற்றும் மணி, அல்பட், உள்பட பலர் உடனிருந்தனர்.

