தூத்துக்குடி.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட மதிமுக சார்பில் ரூ. 2 லட்சம் மதிப்பிலான வெள்ள நிவாரண பொருட்கள் மேயர் ஜெகன் பெரியசாமியிடம் வழங்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17, 18 ஆகிய தேதிகளில் பெய்த பெரும் மழையால் மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்டது. மாவட்டத்தின் பல பகுதிகளில் குளங்களில் உடைப்பு ஏற்பட்டும், அதிகனமழை காரணமாகவும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. வரலாறு காணாத மழையினால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பொதுமக்கள் தங்கள் வீடுகளை இழந்து வீதிக்கு வரும் நிலை ஏற்பட்டது. இதில் ஆடு, மாடு மற்றும் விலைமதிப்பற்ற பல பொருட்கள் இழப்பும் ஏற்பட்டது.
மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் பணிகளையும் மேற்கொண்டு நிவாரண உதவிகளையும் செய்து வரும் நிலையில் வடக்கு மாவட்ட மதிமுக செயலாளர் ஆர்.எஸ்.ரமேஷ் தலைமையில், ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர் விநாயக ரமேஷ் முன்னிலையில், மாநில துணைப் பொதுச் செயலாளர் தி.மு. இராசேந்திரன் ஆகியோர் தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமியடம் ரூ. 2 லட்சம் மதிப்புள்ள வெள்ள நிவாரண பொருட்களை வழங்கினார்கள்.
இது தவிர மிக பாதிப்புக்கு உள்ளான அனல் மின் நிலைய ஒப்பந்த தொழிலாளர்களுக்கு மதிமுக சார்பில் 1 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்களும் மாநகராட்சி அலுவலகத்தில் வைத்து வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் மாநகர செயலாளர் முருகபூபதி, மாநில வெளியிட்டு அணி செயலாளர் நக்கீரன், தீர்மானக் குழு உறுப்பினர் முத்துச்செல்வன், எம்எல்எப் மாநில பொருளாளர் அனல் செல்வராஜ், தலைமை செயற்குழு உறுப்பினர் வனராஜன், பொதுக்குழு உறுப்பினர் முத்துப்பாண்டியன், மாநகர அவை தலைவர் தொம்மை, மாவட்ட இளைஞரணி செயலாளர் பாலசுப்பிரமணியன், தராசு மகாராஜன், ராம்குமார், பொன்ராஜ், செல்லப்பா மற்றும் மதிமுகவினர் பலர் கலந்து கொண்டனர்.

